பக்கம்:பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
செருப்பு: காற்றால் உனக்கு நடுக்கம் - நல்ல
கடும் இருட்டில் ஒடுக்கம்!
குடை: நீரைக் கண்டு நெருங்கி - நீ
நனைவாய் உடலும் சுருங்கி!
செருப்பு: இரவும் பகலும் நண்பன் -
யார்க்கும் என்னால் இல்லை துன்பம்!
குடை: கையில் பிடித்து மதிப்பார் -
உனைக் காலில் போட்டு மிதிப்பார்!
செருப்பு: உனையும் நானே சுமப்பேன் -
இதை உணர்ந்து கொள்ளு வாயே!
குடை: உனக்கும் நிழலைக் கொடுப்பேன் -
இதை உணர்ந்து கொள்வாய் நீயும்!
செருப்பு: மேலே நின்று காப்பாய் - கீழ்
மண்ணில் தங்கிக் காப்பேன்;
குடை: நமக்குள் எதற்குப் பகையே - இனி
நண்ப ராகிப் போவோம்!

38

பாச்சோறு