பக்கம்:பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடையில் இடையில் நின்றது வண்டி;
ஏறி இறங்கினர் பல பேர்கள்!
நடைதான்! இரும்புச் சக்கரம் இல்லை!
தண்ட வாளம் நடைபாதை!

கால்கள் வலித்தன; உடல்கள் சோர்ந்தன;
களைத்துப் போனது புகைவண்டி!
வாலைப் போலும் நீண்டிணைந் திருந்த
வண்டிகள் கழன்றன ஒவ்வொன்றாய்!

வெட்ட வெளியில் மாலைப் பொழுதில்
விளையா டுவமே புகைவண்டி!
கொட்டும் மழையில் கொளுத்தும் வெயிலில்
குப் குப் வண்டி செல்லாதே!

40

பாச்சோறு