பக்கம்:பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இவற்றுள் ஒரு சில தவிர, மற்றவை முன்னரே தென்மொழியிலும் தமிழ்ச்சிட்டிலும்(குரல் 4 இசை 2-3 முடிய) வெளிவந்தவை.

இப்பாடல்களை முன்னமேயே மனப்பாடம் செய்து பாடிய குழந்தைகள் பல. பல நிலைகளிலும் அவை அவற்றை என் முன்னர் பாடி மகிழ்வித்திருக்கின்றன. இத்தொகுப்பு அவற்றிற்கு மேலும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்குமாறு பக்கத்திற்குப் பக்கம் வண்ணப் படங்களுடன் வெளியிடப்பெறுகின்றது. தமிழ்ச்சிட்டைத் தொடக்கத்திலிருந்து படித்தறியாத குழந்தைகளுக்கோ இத்தொகுப்பு ஓர் அரிய பெட்டகமாகும்.

சிறுவர்களின் பாடப் பொத்தகங்களில் இடம்பெற வேண்டிய பாடல்கள் இவை.

பள்ளிகளில் பரிசளிக்கக் கூடிய நூல் இது.

பயன்படுத்திக் கொள்பவர்களின் திறனையும் அறிவையும் பொறுத்தது இதன் பயன்!

எதிர்காலத் தமிழகத்திற்கு என் படையல் இது!

இதனைப் பொத்தகமாக வெளியிட்டு உதவிய இராசிபுரம் வள்ளுவர் நூலகத்தார்க்கும் இதற்கு வேண்டிய ஓவியங்கள் வரைந்துதவிய ஓவியர் திரு. சின்னையன் அவர்களுக்கும் என் நெஞ்சு நிறைந்த நன்றி.

அன்பன்

கடலூர்-1.

கதுலை.தி.பி.உயயசு (17-10-72) பெருஞ்சித்திரன்.

6

பாச்சோறு