மு. க வு ைர்.
வன வந்தது. சரித்திரம் என்பதற்கு உண்மையாக கடந்த வரலாறு என்பது பொருள். சர்= கடத்தல். இதல்ை இச் சரிதத்தின் சரகமான புனித நிலை இனிது புலனும்.
நமது ஆங்கிலப் பேரரசு சங்கு வருவதற்கு 59 ஆண்டு களுக்கு முன்னர் ஈண்டு இது நிகழ்ந்தது. கி. பி. 1798முதல் 1801 வரை கும்பினியாருக்கும் பாஞ்சாலங்குறிச்சியாருக்கும் ாடங்க போராட்ட வரலாறுகளே இதில் பாராட்டப்பட்டுள்ளன. இரு திற நிலைகளையும் ஒரு திறத்தும் கோடாமல் கக்க சாசனங் களைக் கொண்டு மிக்க கவனத்துடன் உண்மைகளை ஊன்றி நோக்கி ஒர்ந்து ஆராய்ந்து தேர்ந்து எழுதியுள்ளமையால் அறிவுடையார் அனைவரும் இதனை உவந்து கொள்ளுவர் வன்னும் உறுதி பெரிதுமுடையனப் உளம் மகிழ்ந்துள்ளேன்.
இவ் ஆதீனத்தின் ஆதி வரலாற்றுப் பத்திரங்கள், பழைய வட்டுச் சுவடிகள், கும்மிகள், அம்மானைகள், வம்மிச வழிகள், அரசாங்க அறிக்கைகள், குறிப்புகள் (Records), பரம்பரையான உரம்பெறு கேள்விகள் முதலியன இந் நூலைத் திறம் பெற வழுதுதற்கு உறுதியான ஆதாரங்களாய் அமைந்திருந்தன.
ாசம் ஆண்டுகட்கு முன்னர் இத் தென்னடு இருக்த கிலே, பாளையகாரர் பதிந்திருக்க பான்மை, குடிசனங்கள் குலாவி யிருந்த மேன்மை, படை வீரர்கள் பயின்று வந்த ஆண்மை,
கடையுடை பாவனைகள் முதலியன இதன் இடையே காணலாம்.
ஒர் அரசன் எவ்வளவு அருந்திறல் உடையனயினும் மந்திரி ால்லவனுயில்லை ஆயின் அந்த அரசு இனிது செல்லாமல் அல்லல் I I. ji) அடைந்து அலமங்கழியும் என்பதை இந்த அரசனது சரித வரலாற்ருல் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
செந்தமிழ் நாட்டின் திலகம் என விளங்கும் நெல்லை மண் லத்தின் எல்லையில் இக்கதை நிகழ்ந்துள்ளது ஆயினும் வல்லா மண்டலங்களிலும் இ த ன் இசை பரவியுள்ளது. பாமையன் சீமை என மறு புலங்களிலும் இதன் உறு புலம் தெரிய இன்றும் வழங்கி வருதலால் இப் பாஞ்சை வீரர்பால்