பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் காவியங்கள் il கதைப் பகுதியைக் காப்பியப் பொருளாகக் கொண்டு ஆக்கப் பெற்றது. பழைய கதையைக் கையாண்டு அதற்குப் புது உருவமும் புத்துயிரும் கொடுத்துக் காப்பியப் படைப்பு செய்வது கவிஞனின் தனிச் சிறப்பாகும். பழைய கதையைப் புதிய காப்பியமாக வார்ப்பது நாம் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதல்ல; உயிரொளி வீசும் கவிதா சக்தியைப் பெற்ற பெரிய கவிஞர்களால்தான் அவ்வாறு செய்ய முடியும். விவிலியத்தில் காணப்பெறும் சாத்தானின் வீழ்ச்சியைக் குறித்து அழியாப் புகழுடன் விளங்கும் துறக்க இழப்பு போன்ற காப்பியப் படைப்பும், மேனாட்டு வரலாற்று நூல் களில் காணக் கிடக்கும் ஒரு சில செய்திகளைக் கொண்டு ஜூலியஸ் சீஸர், நாலாம் ஹென்றி, ஐந்தாம் ஹென்றி: இரண்டாம் ரிச்சார்டு போன்ற இறவாத புகழுடைய நாடக, இலக்கியங்களின் படைப்பும் ஒப்புயர்வற்ற ஒரு மில்ட்டன் ஒரு ஷேக்ஸ்பியர் போன்ற பெருங் கவிஞர்களால்தான் ஆக்க முடியும். அதுபோலவே, பாரதியின் படைப்பும் கவிதைச் சுவையுடனும், நாடகப் பண்புகளுடனும், புதிய கருத்துக ளுடனும் இலங்குகின்றது. கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந்நூற்றுக்கு மேற்பட்ட அடிகளையுடைய பாஞ்சாலி சபதம் காப்பியப் படைப்பில் பாரதியின் சிறந்த வெற்றி யென்று சொல்வது எள்ளளவும் மிகை ஆகாது. பாரதியின் பாஞ்சாலி சபதம்’ ஒரு காப்பியமாகுமா? காப்பியத்திற்குரிய இலக்கணம் இதற்குப் பொருந்துமா? எந் தெந்த முறையில் பாரதி தன் திறமையைக் காட்டுகின்றார்? என்பன போன்றவற்றை ஈண்டு ஆராய்வோம். நமது மொழிக் குரிய பெருங்காப்பிய இலக்கணத்தையும் மேனாட் டார் காப்பியங்களைப்பற்றிக் கூறும் கருத்துகளையும் முன் நிறுத்தி ஆராயத் தொடங்குவோம். பெருங்காப்பிய இலக் கணத்தைத் தண்டியலங்காரம்,