பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிணிகளெல்லாம் தீர்த்தருளும் கருமாரி - எங்கள் பேதமையைப் போக்கியருள் கருமாரி. துணிவுட்னே நலங்கள்செய்ய கருமாரி - என்றும் துணையிருக்க வேண்டுமம்மா கருமாரி. மனக்கவலே தீர்த்தருளும் கருமாரி - எங்கள் வாக்கினுக்கே ஒளிதருவாய் கருமாரி குணங்களெல்லாம் சிறந்திடவே கருமாரி - உன் கோயில்வந்து கும்பிடுவோம் கருமாரி. கல்விபல கற்றவர்க்கும் கருமாரி - உன் கருணையின்றேல் என்னபயன் கருமாரி? செல்வமிகப் பெற்றவர்க்கும் கருமாரி - உன் திருவருளே பெரியசெல்வம் கருமாரி. பிள்ளைகளைக் காத்தருள்வாய் கருமாரி - எங்கள் பிழைகளெல்லாம் பொறுத்தருள்வாய் கருமாரி உள்ளமதில் குடியிருத்தி கருமாரி - நாங்கள் உள்ளவரை பூசைசெய்வோம் கருமாரி. 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/32&oldid=811419" இலிருந்து மீள்விக்கப்பட்டது