பக்கம்:பாடுங்குயில்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னலம் நெஞ்சினில் ஒருநாளே - மக்கள்

இனநலம் மிஞ்சிடும் பலநாளே

என்னகம் வஞ்சியும் ஒருநாளே - நினைவில்

ஏழையர் பஞ்சையர் பலநாளே

மாந்தனைக் காண்பது சிலநாளே - மனித

மாக்களைக் காண்பது பலநாளே

ஆய்ந்துளந் தங்குதல் சிலநாளே - மக்கள்

ஆகுலம் பொங்குதல் பல நாளே

மண்ணில் நடப்பது சிறுநேரம் - நானுே வானிற் பறப்பது நெடுநேரம் -

நண்ணும் மகிழ்ச்சிகள் சிறுநேரம் - நெஞ்சம்

நையுந் தளர்ச்சிகள் நெடுநேரம்

வீட்டை நினைப்பது சிறுநேரம் - மனைவி

வேட்கை யிருப்பதுஞ் சிறுநேரம்

நாட்டை நினைப்பது நெடுநேரம் - கவிதை

நயந்து தொடுப்பதும் நெடுநேரம்

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/21&oldid=593890" இலிருந்து மீள்விக்கப்பட்டது