பக்கம்:பாடுங்குயில்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கிக் கிளர்ந்தது வீரம்

(சீனம் நம்மைத் தாக்கிய போது பாடப்பட்டது)

T 중

வெள்ளையர் ஆண்டிட வீழ்ந்துகி டந்தது நாடு-கதை வேறு.ந டந்தது வெந்தும டிந்தது பாடு m கொள்ளையர் மீண்டிங்குக் கூடிப்புகுந்திட லாமோ-அவர் கொட்டம டங்கிடக் கூடிஎ திர்த்திடு வோமே

ஏழைய ராயினும் கோழைய ரல்லர் நம் மாந்தர்-படை ஏற்றம்மி குந்திடப் போரிற்ப டைக்கலம் ஏந்திக் காளைகள் ஆயிரம் காணும்ப கைப்புலம் நீந்தும்-ஒரு காவல்பு ரிந்திடும் சேனைபெ ரும்புகழ் ஏந்தும்

சங்கம்மு ழங்கிட வெங்களங் கண்டிடும் வீரர்-எம் சந்ததி சந்ததி யாகவ ளர்ந்திடும் சூரர் தங்களைப் பெற்றிடுந் தாய்க்ங் காத்திடுந் தீரர்-அவர் தாவியெ ழுந்திடின் ஓடிவரும்பகை தீரும்

சாவுக்க ளந்தனில் ஆடிக்க ளித்திடும் நேரம்-எனச் சங்கமொ லித்தது பொங்கிக் கிளர்ந்தது வீரம் 'சூ வைவி ரட்டிடச் சூடுபி. டித்தது நாட்டில்-ஒரு சுட்டுவி ரற்கிடை விட்டுக்கொ டுத்திட மாட்டோம். .

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/26&oldid=593895" இலிருந்து மீள்விக்கப்பட்டது