இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சோலையிலே உதிர்ந்த மலர்
கோலம் போடுது
தோகை மயில் இறகுகளில்
கோலம் போடுது
கோல நிலா மரநிழலில்
கோலம் போடுது
கொண்டையிலே மல்லிகைப் பூ
கோலம் போடுது
வாசலிலே அம்மா கை
போட்ட கோலமே
பார்க்கப் பார்க்க அழகுதரும்
வண்ணக் கோலமே!