பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 வானம் எழுந்து வருபரிதி பொன்னிறத்தை மானும் உடலழகு வாய்த்த மறத்தமிழன்; கொல்லும் புலியேற்றைக் குகைவாழ் சிறுத்தைகளை வெல்லும் மறத்தோளன்; வெற்றியன்றித் தோல்வியினை அல்லும் பகலும் அறியாதான்; ஆன்றவிந்த மேலேசரின் իհ சொல்லின் வழியே தொடர்ந்து செயல்படுவோன்; பொன்சொரியும் புன்னை புனல்சொரியும் ஆழ்கடல்சூழ் தென்னிலங்கை மக்கள் செழுமைக்கும் வாழ்விற்கும் அன்னையாய் நின்றேன்: அறநெறியைத் தப்பாதான்;. மின்னிடையார் பெண்ணினத்தை மேவி வளர்க்கும்.15' பெற்றெடுத்த தாய்தந்தை' என்றுபல பேசுகின்ற சுற்றம் உடையான்; தோள்வலிமை மிக்குடையான் | மிக் அச்சம் அறியான்; அறணல்ல செய்தறியான்; மெச்சும் பெரும்புகழே மேவியவன்; தாய்மொழியாம் தீந்தமிழை வாழ்வின் செல்வப் பெருக்கெனவே lன' ஆய்ந்துணர்ந்து கொண்ட அறவோன்; பரிசேற்க வந்தோர் மனங்குளிர வான் தவழும் கார்போன்றே | * தந்தோல் தன்மான நீள்புகழைத் தந்தோளும் &ت( tوم எதிர்நின்று போராடும் இயல்புடையோன்; ஆரியர்போல் புதர்மறைந்து பாயும் புலியல்லன்: புறப்புண்ணைக் கண்டு வடக்கிருந்த தமிழ்மன்னர் கால்வழியில் பண்டிருந்து வந்த தமிழர் பரம்பரையாம்! வஞ்சமும் சூழ்ச்சியும் மலிந்திருந்த தம்பிக்கும் (யோன்: நெஞ்சில் இடங்கொடுத்தோன்; நீங்காத பற்றுடை பெண்கொலையே எண்ணுத பெற்றியோன்; நீளிலங்கை மண்ணிற்கு நல்ல வரலாற்றைத் தந்தவனும்!