பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

ஒருமைப் பாட்டோ டொன்றிச்

சிறந்து வாழ்தல் தெளிந்தபே ருண்மையே!


நாள்: - 15-1-1959.

இடம்: திருச்சி வானொலி நிலையம்.

தலைவர்: திரு. தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், எம்.ஏ., பி.எல்.,

தலைப்பு: இரு வேறு உலகு–ஒருமைப்பாடு.

குறிப்பு: திருச்சி வானொலியில் ‘ஆகாசவாணி’ என்று கூறி வந்ததை எதிர்த்துப் போராட்டம் நடந்து வந்தது. அதன் காரணமாகக் கவிஞர் இவ் விழாவில் கலந்து கொண்டாரில்லை! வானொலியாரின் போக்கை எதிர்த்துச் செய்தித் தாள்களுக்கு அறிக்கை விட்டுத் தாம் கலந்து கொள்ள இயலாமையைத் தெரிவித்துவிட்டார். அதனால், இது அரங்கேற்றம் பெறவில்லை.

1. கலை-கல்வி; நுண்கலைகள்.

2. கலை-ஆடை.

3. பால்சாக்-பிரெஞ்சு நாட்டுப் புதினக் கதை எழுத்தாளர்.

4. சேக்ஸ்பியர்-இங்கிலாந்து நாட்டு நாடகக் கவிஞர்.

5. யூகோ-விக்டர் யூகோ; பிரெஞ்சு நாட்டு வரலாற்றுப் புதினப் படைப்பாளர்.

6. மேலை நாட்டறிஞன் - மிச்சலே என்னும் பிரெஞ்சு நாட்டரசர்.

7. வால்டேர்–பிரெஞ்சு நாட்டின் புரட்சிக்கு அடி கோலியவர்.

8. அரசன்-நறுந்தொகை - இயற்றிய அதிவீரராம. பாண்டிய அரசன்.

9. லபோந்தேன் - பிரெஞ்சு நாட்டுச் சீர்திருத்தக் கவிஞர்.

10. ழுய்ல்பெரி-பிரெஞ்சு நாட்டு அமைச்சன்; கட்டாயக் கல்விச் சட்டத்தைக் கொண்டு வந்தவன்.

11, 12. பிரெஞ்சுப் பழமொழி.