பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கானக் குயில்போற் கவிதை இசைத்திடுவா!
வானிலவே கேட்டு மகிழ்!

முடிவுரை
(வெண்பா)


12யிரட்டிப் பாடினார் பாவலர்கள் ! வாழ்கவே!
கை13 யிரட்டிப் புத்துலகம் காட்டினர்!—வையத்தில்
பாட்டின் திறத்தாலே பல்வளமும் பெற்றென்றும்

நாட்டுக நல்ல புகழ்!

நாள்: 4.4-1966.

இடம்: திருக்கழுக்குன்ற மலையடிவாரம் - முத்தமிழ் இலக்கிய மன்ற மூன்றாம் - ஆண்டு நிறைவு விழாக் கவியரங்கம்.

தலைவர்: புதுமைக் கவிஞர் திரு. வாணிதாசன்.

தலைப்பு: புதியதோர் உலகு செய்வோம்.

1. திருக்கழுக்குன்றம் - ஓர் ஊர். திருக்கு+அழு- மாறுபாடு கெட.

2. உணவுப் பொருள் வழங்கும் அட்டை; பங்கீட்டுச் சீட்டு; ரேஷன் கார்டு.

3. திருக்கழுக்குன்றத்துப் புலவர் திரு. எம். எஸ். மணி.

4. மலையிடைப் பிறந்த மணி - இரத்தினம்.

5. தொண்டை நாட்டின் வலிமை; பற்றுக்கோடு.

6. தொண்டை நோய்.

7. வாய் - உண்மை.

8. வாய். - உதடு, வாய்

9. கண் முறையே விழி, அறிவு, இடம்.

10. ஆய் முறையே தாய்; அழகு.

11. காசு-குற்றம், பொருள்.

12. ஐ-ஐந்து, அழகு; மேன்மை.

13. கை-ஒழுங்கு; ஆற்றல்.