பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

கலைஞரை நாம் போற்றிடுவோம்; அவர்கள் இன்றேல்
        கைப்புக்கு மாமருந்து கிடைக்கா தென்றும்!
கலைஞரை நாம் போற்றிடுவோம்; அவர்கள் இன்றேல்

        வாழ்க்கையிலே களிப்பென்றும் காணப் போமோ?



நாள் : 14-7-1968.

இடம் : புதுவைக் கல்விக் கழக 42வது ஆண்டு நிறைவு விழாக் கவியரங்கம்.

தலைவர் : இலக்கணச் செம்மல், வித்துவான், திரு. சு. குமாரசாமி செட்டியார்.

தலைப்பு : நல்வாழ்விற்குப் பயன் படுவதில் மிக்கார்—கலைஞர்.

முன்னிலை: சென்னை மகாவித்துவான் திரு. மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை, புதுவை மொழியாக்கச் செல்வர் திரு. இரா. தேசிகப்பிள்ளை, பாராளுமன்ற உறுப்பினரும் புதுவை நகர மேயருமான திரு. த. சேதுராமச் செட்டியார், புதுவைக் கலைக்கழகப் பிரெஞ்சு மொழிப் பேராசிரியர் திரு. குரோ.

1. பிரெஞ்சாட்சியில் மொழிபெயர்ப்பாளராகத் திகழ்ந்தவர்; உயரிய நாட்குறிப்பு எழுதியவர்.

2. புதுவை மொழியாக்கச் செவ்வர் திரு. இரா . தேசிகப்பிள்ளை.

3. இக்கவியரங்கத் தலைவர், இலக்கணச் செம்மல், புதுவை வித்துவான் திரு. சு. குமாரசாமி செட்டியார்.

4. தலை-பெருமை.