பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைத்து இதைப் பாடியிருக்கிருர். குழந்தைகள் தாளம் போட்டு உற்சாகமாகப் பாடும் வகையில் பாடல்கள் அமைந்திருக்கின்றன. நீ தி க ளே யு ம் தத்துவங்களையும் விரித்துக் கூறிச் சோர்வடையச் செய்யாமல் உணர்ச்சி 器 鸟列 ட்டும் வகையில் நிகழ்ச்சிகளைச் சொல்விக் கதையைப் பின்னியிருக்கிரு.ர். குழந்தையோடு குழந்தையாகப் பழகிப் பெற்ற அநுபவமும், பாடிப் பாடிக் கைவந்த பழக்கமும் அழ. வள்ளியப்பாவின் பா ட ல் க ளு க் கு மதிப்பை உண்டாக்கியிருக்கின்றன. கா ந் தி யி ன் மறைவைச் சொல்லும் பகுதி மிகவும் உருக்கமாக அமைந்திருக்கிறது. குழந்தைகளின் உள்ளமென்னும் பீடத்தில் காந்தியின் புனித உருவத்தை நிறுத்துவதற்கு இதைவிடச் சிறந்த கருவி வேறு ஏதும் இல்லை. இதைப் பாடலாம்; தாளம், போட்டு ஆடலாம்; காந்தியின் தகைமையை எண்ணிப் பெருமை கொள்ளலாம்; நாமும் இப்படி வாழவேண்டும் என்ற ஆர்வம் கொள்ளலாம். குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகம். & אי 2" א - - م . مبدر : . مير مبتحم مبي ، هي و بيع தமிழ் மக்கள் தம் குழந்தைகளுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கியளிப்பதைக் கடமையாகக் கொண்டால் குழந்தை களின் உள்ளத்தில் ஒளியுண்டாக்கியவர் ஆவார்கள். இறைவன் திருவருளால் குழந்தைக் கவிஞர் நீடுழி வாழ்ந்து, இன்னும் பல க வி ைத க ளேக் குழந்தை உலகத்துக்கு வழங்கவேண்டுமென்று வாழ்த்துகிறேன். . காத்தமலே கி. வா. ஜகந்நாதன் சென்னை.28. # 8–10-1968