பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தச் சரித்திரத்தை-கல்ல அறிவுப் பொருத்தமுடன் ‘பாட்டிலே காங்திகதை'-எனப் படங்களும் சேர்ந்ததுவாய் அறிஞர்கள் மெச்சும்படி-வெகு அழகுற அச்சடித்த இளைஞர் இலக்கியத்தைப்-பொலிவுற இயற்றிய கலக்குரியான் 'குழந்தைக் கவிஞர்'எனத்-தமிழ்த்தாய் குலவிடும் தவப்புதல்வன் தெள்ளிய பாவாணன்-அழ வள்ளியப் பாவென்னும் அன்புள என்கண்பன்-கற்றுனர்க்(து) அடங்கிய மனப்பண்பன். குழங்தை எழுத்தாளர்-சங்கம் கூட்டி வளர்த்தவனுய், சிறப்புள எழுத்தாளர்-பலர் தோன்றிட வழிசெய்தோன். கவித்திறம் வளர்ந்திடவும்-அதில் கலைத்திறம் கிளர்ந்திடவும் சீரும் சிறப்போடும்-மிக்க செல்வச் செழிப்போடும் உடல்நலப் பலத்தோடும்-தெய்வம் உறைகிற மனத்தோடும் பல்லாண்டு வாழ்ந்திருக்க-வாழ்த்திப் பரமனைப் பணிந்திடுவோம். --வெ. இராமலிங்கன்