பக்கம்:பாட்டுத் திறன்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் g? பெண்ணே இத் தேர்தலை நடத்துகின்றாள்; தேர்ந்தவர்க்குத் தன்னையே தனிப்பெரும் பரிசிலாகத் தந்து உதவுகின்றாள். எனவே, இத்தேர்தலில் பெண் வாளா கண்டு கிற்க, ஆண் கள் தம் திறன்களையெல்லாம் காட்டி எதிர் கிற்கின்றனர். இவ்வாறு எதிர்காட்டி கிற்றலே இணைபயிலுதவ் என்பது. மக்கள் எதிர்பாலார் மெச்சிப் பாராட்டுமாறு தம் உடலுரத்தைக் காட்டுகின்றனர். மயில் ஆடுகின்றது. ஆட்டப்புறா கூத்தாடு கின்றது. வானம்பாடி பல காள்வரை பாடி மயங்குகின்றது.ஆண் மகன் மார்பை அகலப்படுத்தித் திரண்டு உருண்ட தோள்களைக் காட்டி மீசையை முறுக்கி நேர்கிமிர்ந்து கிற்கின்றான். தன் அழகு போதாதென்று அணிகளும் உடைகளும் புனைந்து செருக்கி நிற்கின்றான். கலவியே புணர்ச்சி என்னும் இவ் வியல்பூக்கத்தின் முடிபாலும் அது சிகழ்வதற்கு முன்னாகப் பல நாட்கள் வரை இவ்வாறு ஒருவரை யொருவர் விரும்பிப்பாராட்டு எடுத்தலைக் காண்கின்றோம். இவ்வாறு இணைபயிலுதல் பண்ணுறுத்தும் துலங்கலாகும்." பின்னிலை உள்ளக்கிளர்ச்சி : ஒர் உள்ளக்கிளர்ச்சி எழுந்து முடிந்த பின்னரும் அவ்வுள்ளக்கிளர்ச்சி மறையாமையைக் காண் கின்றோம். அஃதாவது, அவ்வுள்ளக்கிளர்ச்சி எழுவதற்குக் காரணமான தாண்டல் மறைந்த பிறகும் அவ்வுள்ளக்கிளர்ச்சி அமைதியான நிலையில் தொடர்ந்து டிேக்கின்றது. இதுவே பின்னிலை உள்ளக்கிளர்ச்சியாகும். இதனை உட்பாட்டு நீட்சி' என்றும் வழங்குவர். இப்பின்னிலை உள்ளக்கிளர்ச்சியின் பொழுது சிறிது தூண்டல் இருந்தாலும் அதே உள்ளக்கிளர்ச்சி தோன்றி விடும். எடுத்துக்காட்டாக, சில சமயம் அச்சம் எழுந்து முடிந்த பின்னரும் அச்சங்லை மறையாமையைக் காண் கின்றோம். அது தணியச் சிறிது போதாகின்றது. அப்பொழுது எப் பொருளைக் கண்டாலும் அஞ்சுவது எளிதாகின்றது மிகச் சூடான பாலைக் குடித்த தெனாலிராமனின் பூனை, பாலைக் காணும் பொழுதெல்லாம் ஓடிய கதையை காம் கேட்கின்றோ மன்றோ? இளைஞன் ஒருவன் வேலைக்குப் போகின்றான். களைப்பு மிகுதியினால் அவனுடைய உளி கைதவறிக் கண்ணாடி 44. usin sa višgiú stæ*** - Preparatory Response. கி. பின்னிலை உள்ளக்கிளர்ச்சி அல்லது உட்பாட்டுநிலை Mood, பா.-?