பாட்டுத் திறன் శ్రీ ! முடையெடுத்த கவcதங் தொட்டுண்டுங் கட்டுண்டும் முதல்நாள் காகக் கு ையெடுத்து மழைதடுத்தும் வஞ்சனைக்கோர் கொள்கலமாம் கொடிய பாவி படையெடுத்து வினை செய்யேன் எனப்புகன்ற மொழிதப்பிப் பகைத்த போரின் இடையெடுத்த கேமியினால் வெயில்மறைத்தான் இன்னமிவன் என்செய் யானே.” அர்ச்சுனன் செய்த சபதத்திற்கு அஞ்சி துரியோதனன் சயத் திரதனை நிலவறையுள் மறைத்துவைத்துப் பாதுகாக்கின்றான். கண்ணன் தன் திருவாழியால் பகலவனை மறைக்க, ப்ொழுது சாய்ந்தது என்று கருதி, கெளரவர்கள் சயத்திரதனை வெளிக் கொணர்கின்றனர். கண்ணன் ஆணையால் அர்ச்சுனன் கணை தொடுத்துச் சயத்திரதனைக் கொல்லுகின்றான். கண்ணன் திரு வாழியை விலக்கப் பகலவன் காணப்பெறுகின்றான். சேனையி லுள்ளார் அனைவரும் வியப்பெய்துகின்றனர். இங்கிலையில் துரியோதனன் கண்ணன் மீது சினங்கொண்டு சில கூறிச் சேனை யுடன் சென்று போர் தொடங்குகின்றான். மேற் குறித்த பாடல் சினத்துடன் துரியோதனன் பேசுவதைக் காட்டுவது. இது அறிவு சிலையைத் தொடாது, உணர்வு நிலையைத் தொடுவதை அநுபவித்து மகிழ்க. - ஒத்துணர்ச்சியும் ஒட்ட உணர்தலும் : உணர்ச்சிப் பெருக்கால் பூரித்திருக்கும் பிறரைக் காணும்பொழுது கம்மிடமும் அதே உணர்ச்சி எழுதல் இயற்கை. மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத் திருக்கும் நண்பர்கள் மகிழ்ச்சியையும், மனவருத்தத்தர்ல் பீடிக்கப் பெற்றுள்ள கண்பர்கள் துக்கத்தையும் நம்மிடம் தொற்றிவிடுவர். கிளர்ச்சி பெற்றுள்ள மக்களுள்ள இடத்தில் நாம் இருக்கும்போது நம்மிடம் கிளர்ச்சி எழுவதற்குக் காரண மின்றேனும், அது நம்மிடம் எழுகின்றது. இவ்வாறு பிறருடன் ஒத்து உணரும்நிலைதான் ஒத்துணர்ச்சி" என்பது. இஃது இயல் பூக்கத்தின் அடிப்படையில் அமைந்த தாண்டல்போலச் செய் யும் துலங்கலா, அன்றிப் பயின்ற துலங்கலா என்பது பற்றி 9. வில்லி பாரதம் : பதினான்காம் போர்ச்சரு. 172. 10. &#gon ##3 - Sympathy. - 11, Gus seš Gruujú Gisoisso - Imitative responsu. ur.—6
பக்கம்:பாட்டுத் திறன்.pdf/92
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை