பக்கம்:பாட்டும் கதையும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பாரதிக்கு மாணவன்
பாட்டுப்பாட வல்லவன்
யாரெதிர்த்த போதிலும்
போருடற்ற வல்லவன்.
மெத்தவும் படித்தவன்
மீசை வைத்த பாண்டியன்
முத்து முத்துப் பாடலால்
முத்தமிழ் வளர்த்தவன்.
செந்தமிழ்க்குக் காவலன்
சீர்திருத்த நாவலன்
சொந்தமென்று வந்தநம்
சுப்புரத்ன பாவலன்.

40