பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

335


கொண்டிருந்தது. அவநம்பிக்கையின் தளர்ச்சியை மறைக்க அவளாக உண்டாக்கிக்கொண்ட நினைவன்று அது. புனல் ஒடும் வழியில் புல் சாய்ந்தாற்போலவும் நீர்வழி மிதவை போலவும், துளையிட்ட காசுகள் கயிற்றில் கோவை பெறல் போலவும், தற்செயலான ஒரு தவிர்க்க முடியாத நினைவு என்று அதைக் கூறவேண்டும். . வடகடலில் இட்ட நுகத்தடி ஒன்று பல்லாண்டுக் காலமாகத் தள்ளுண்டு மிதந்து மிதந்து தென்கடலில் இட்ட துளையுள்ள சுழி ஒன்றில் வந்து பொருந்திக் கொள்வது மாதிரிப் பொருந்திய நினைவு அது. -

ஒவ்வொரு நாளும் செம்பவழத்தீவின் கடைவீதியில் கலகலப்புக்குக் குறைவே இருக்காது! அன்றும் அவளுடைய கடைக்கு யார் யாரோ வந்தார்கள்; சங்கு வாங்கினார்கள். முத்து, பவழம் வாங்கினார்கள். வருபவர்களுக்கு விற்பதற்காகச் சங்கை எடுத்துக் கொடுக்கும்போது எல்லாம் சங்கோடு சேர்த்துப் பிடித்துக்கொண்ட அந்த ஆண்மகனின் கைகள் நினைவுக்கு வரும். உச்சிமரக் கிளையில் நின்றுகொண்டு தன் உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றி கூறி அவளுடைய வளைக்கரங்களைப் பற்றிக்கொண்டு ஆனந்தக் கண்ணிர் சிந்திய காட்சி நினைவுக்கு வரும். அந்த நினைவுகளெல்லாம் வரும்போது மதிவதனி தன்னை மறந்து தான் இருக்கும் கடையையும், கடையிலுள்ள பொருள்களையும் மறந்து எங்கோ போய் மீள்வாள்.

நேற்றுக்காலைவரை தன்னையும், தன்னுடைய வர்களையும் தன் சூழ்நிலையையும் பற்றித்தான் அவளுக்கு நினைக்கத் தெரிந்திருந்தது. இப்போதோ, நினைப்பதற்கும் நினைவுகளை ஆளுவதற்கும் வேறு ஒரு புதியவன் கிடைத்துவிட்டான். செம்மண் நிலத்தில் மழை பெய்தபின் நீருக்குத் தன் நிறம் ஏது? தன் சுவை ஏது? தன் மணம் ஏது? மாலையில் அவளுடைய தந்தை கடைக்கு வந்துவிட்டார். “பெண்ணே கடையை நான் பார்த்துக் கொள்கிறேன்; உன்னுடைய அத்தை உன்னை வீட்டுக்கு வரச்சொன்னாள், நீ போ” என்று அவள்ை வீட்டுக்கு அனுப்பினார்.