பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

337


இல்லையானால் நாம் செய்யாதுபோன செயலை நமக்கே செய்துவிடுவார்களே!”

கடைசியாகப் பேசியவனுடைய குரலில் பயம் மிதந்தது. தெருக்கோடி வரை வீதியில் போய்க்கொண்டும், வந்து கொண்டும் இருக்கும் மற்றவர்களைப் பற்றி கவலையில்லாமல் இரைந்து பேசிக்கொண்டு நடந்தார்கள் அந்த மூவரும். மதிவதனி தற்செயலாகத் தெருவில் நடந்து செல்பவள் போல் கேட்டுக்கொண்டே சென்றாள். அந்த மூன்று பேரும் ஒரே மாதிரிச் சிவப்பு நிறத்தில் தலைப்பாகை அணிந்திருந்தனர். பார்ப்பதற்கு முரடர்களாகத் தோன்றினர். அவர்கள் பேச்சைக் கேட்டு எந்தச் சந்தேகத்தோடு அவள் பின்தொடர்ந்தாளோ அது சரியாக இருந்தது. நேற்றிரவு கடற்கரையில் அந்த இளைஞனை அவர்கள் துரத்தும்போதும், அவன் வலை மூலம் தன்னால் மரக்கிளைக்குத் தூக்கப்பட்டபின் தாழம் புதரில் தேடியபோதும், அந்த முரடர்களுடைய உருவத்தைச் சரியாகக்கண்டு நினைவு வைத்துக்கொள்ள அவகாசமில்லை அவளுக்கு இப்போது அவர்களைக் காணும்போது அவளுக்கே அச்சமாக இருந்தது. அவர்கள் பேச்சிலிருந்து அனுமானித்துக் கொண்ட உண்மையால் கொலை செய்யவேண்டுமென்றே அவர்களை யாரோதுாண்டிவிட்டு அனுப்பியிருக்கும் விவரமும் அவளுக்குப் புரிந்தது. வீட்டுக்குப் போவதை மறந்து மேலும் பின்தொடர்ந்தாள் அவள். அவர்கள் உரையாடல் மேலும் வளர்ந்தது. - . . . . -

“ஈழத்தில் போய்ச் செய்யவேண்டிய கொலையை இடைவழியிலேயே செய்வதற்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது, தவற விட்டுவிட்டோம்.” . . . - . . . .

“கொல்லாவிட்டால் என்ன? அவன் மட்டும் நமக்குப் பயந்து ஓடிக் கடலில் குதித்திருந்தால் கொன்றது மாதிரித்தான்! இந்தப் பக்கத்துக் கடல் ஓரங்களில் முதலைகளின் புழக்கம் அதிகம். அதனால்தான்.எங்கு பார்த்தாலும் கரையோரங்களில் இரும்பு வலைகள் விரித்திருக்கிறார்கள். அவன் கடலில் குதித்தது மெய்யானால் நாம் செய்ய வேண்டிய காரிய்த்தை முதலைகள் செய்திருக்கும்.” - .

ur, G5.22