பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


ஒரு பிணக்குமில்லாமலே சண்டை போடுவதுபோல் இப்படிப் பொய்க் கோபத்தோடு பேசிக்கொள்வது அந்த இரு பெண்களுக்கும் பொழுதுபோக்கான ஒரு விளையாட்டு. ‘மகாராணி என்ற பெயரை விலாசினி எடுத்தவுடன் பகவதி கலவரமடைந்தாள். விலாசினிதான் ஏதாவது அரட்டை அடிப்பதற்குத் தேடி வந்திருப்பாள் என்று எண்ணி வம்பு பேசிய பகவதி பரபரப்புற்று, “ஐயோ! மகாராணியா கூப்பிட்டார்கள்? வந்தவுடனே இதைச் சொல்லியிருக்கக் கூடாதா நீ?” என்று அவளைத் துரிதப்படுத்தி வினவினாள்.

‘ஏனடி பதறுகிறாய் ! ஒன்றும் அவசரமான காரியமில்லை. கோட்டாற்றுச் சமணப் பள்ளியிலிருந்து அந்த மொட்டைத் தலைச் சாமியார்கள் வந்து மகாராணியிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து மகாராணி ஏதோ ஒரு பாட்டை எழுதி வாங்கி வைத்துக்கொண்டார். அதை உன் வாயால் பண்ணோடு பாடிக் கேட்கவேண்டும் போல ஆசையாக இருக்கிறதாம்!” என்றாள் விலாசினி.

“இவ்வளவுதானா?” “இவ்வளவேதான் செய்தி, நீ அன்று நிலா முற்றத்தில் என் நடனத்தின் போது பாடிய திருவாசகப் பாட்டைக் கேட்டதிலிருந்தே உன்னுடைய குரலில் மகாராணிக்கு ஒரே மோகம்.” - -

“ஏன்? உன் நாட்டியத்தில் மட்டும் மோகமில்லை யாக்கும்? விலாசினியை எதிர்த்துக்கேட்டாள் பகவதி. - -

“சரி சரி. நீ வா. மகாராணியைப் போய்ப் பார்த்துவிட்டு வந்து, அப்புறம் நமக்குள் வம்பளக்கலாம்” என்று குரலைக் கடுமையாக்கிக்கொண்டு பகவதியைக் கூப்பிட்டாள் அவள்.

அவசரம் அவசரமாக உடை மாற்றி அலங்கரித்துக் கொண்டு விலாசினியோடு புறப்பட்டாள். பகவதி.

மகாராணி அவர்களை அன்போடு வரவேற்றாள். பகவதி இன்று என் உள்ளம் பல காரணங்களினால் அலமந்து கிடக்கிறது. இந்தமாதிரிக் கவலைகளை மறக்கத் தெய்வத்தை