பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

353


பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்தால்தான் நிம்மதி உண்டாகும் போலிருந்தது. விலாசினிக்கு மிக மென்மையான சுபாவம். பிறர் தன்னை நோகச் செய்தாலும் சரி, தான் அறியாமல் பிறரை நோகச் செய்தாலும் சரி, விரைவில் அதற்காக வாட்டமடைந்து விடுவது அவள் இயல்பு. உறக்கம் வராமல் மஞ்சத்தில் இதே நினைவோடு புரண்டு கொண்டிருந்த விலாசினி, “போய் அவளைப் பார்த்துப் பேசி விட்டே திரும்புவது” என்ற உறுதியுடன் கிளம்பினாள். முன்பெல்லாம் அவர்கள் ஒரே இடத்தில் அருகருகே சேர்ந்து படுத்துக்கொள்வார்கள். தூக்கம் வரும்வரை எதைப் பற்றியாவது பேசிக்கொண்டிருந்து விட்டுத் தூங்குவார்கள். இப்போது தனித்தனியே அவரவர்கள் தங்கியிருந்த இடங்களில் படுத்துக் கொண்டதால் விலாசினி பகவதியைப் போய்ப் பார்க்க வேண்டியிருந்தது. அதற்குள் பகவதி படுத்துத் துரங்கியிருந்தால் என்ன செய்வது? என்ற சந்தேகம் போகும்போது அவளுக்கு ஏற்பட்டது. தூங்கியிருந்தால் பேசாமல் திரும்பி வந்துவிடுவோம். காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று தனக்குத்தானே சமாதானமும் செய்து கொண்டு மேலே நடந்தாள்.

விலாசினி பகவதியின் அறைவாசலை அடைந்தபோது அறைக்குள் விளக்கெரிவது தெரிந்தது. துரங்கவில்லை. விழித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் போலும் என்று தனக்குள் மெல்லச் சொல்லிக் கொண்டாள் விலாசினி. அறையின் கதவு அடைத்து உட்புறமாகத் தாழிட்டிருப்பது போல் தெரிந்தது. விலாசினிக்குக் கதவைத் தட்டலாமா, வேண்டாமா, என்று ஒரு தயக்கம் ஏற்பட்டது. அறைக்குள் எட்டிப்பார்த்து விட்டுத் தட்டலாம் என்று அறைக் கதவின் இடப்பக்கம் இருந்த சாளரத்தை நெருங்கி உள்ளே எட்டிப் பார்க்க முயன்றாள் அவள். சுவரில் சாளரம் அவளுடைய உயரத்தை விட அதிகமான் உயரமுள்ள இடத்தில் அமைந்திருந்ததனால் எட்டவில்லை.

என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பும் வியப்பும் அடைந்து, சுற்றும் முற்றும் மருண்டு பார்த்துக்கொண்டு நின்றாள் பா. தே.23 -