பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


எல்லோரையும் உள்ளே அழைத்துக்கொண்டு சென்றான் கொடும்பாளுரான். சோழனுக்குப் பக்கத்தில் நடந்து சென்ற அவன், “அரசே! நாம் நாகைப்பட்டினத்திலிருந்து கடல் மார்க்கமாக அனுப்பிய ஆட்கள் தெற்கேயிருந்து ஏதேனும் இரகசியச் செய்திகள் அனுப்பினார்களா? அவர்கள் போன காரியம் என்ன ஆயிற்று?-என்று காதருகில் மெல்லக் கேட்டான்.

“அதைப்பற்றி நம்முடைய தனிக் கூட்டத்தில் விரிவாகப் பேசிக் கொள்ளலாம்” என்று சுருக்கமாக மறுமொழி கிடைத்தது சோழனிடமிருந்து. உரிமை கொண்டாடி ஆர்வத்தோடு கேட்டதன் கேள்விக்கு அங்கேயே அப்போதே சோழன் விடை சொல்லாதது கொடும்பாளுர் மன்னனுக்குக் கொஞ்சம் வருத்தத்தை அளித்தது.

கொடும்பாளுர் அரண்மனையில் மிக ரகசியமான தொரு பகுதியில் ஐந்து அரசர்கள் சந்தித்தார்கள். முன்னையக் கூட்டத்தைக் காட்டிலும் இது முக்கியமான கூட்டமாகையினால் அமைச்சர்கள் பிரதானிகளைக்கூட இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு விடவில்லை.

சோழன் கூட்டத்தைத் தொடங்கிவைத்தான். “உறையூரில் சந்திக்கும்போது நாம் மூவராயிருந்தோம். இப்பொழுது கொடும்பாளுரில் ஐந்து பேராக வளர்ந்திருக்கிறோம். இது நம்முடைய எண்ணத்தின் வெற்றிக்கு ஒரு சிறிய அறிகுறிதான். காவிரிக்கரையிலிருந்து காந்தளூர்ச் சாலையிறாக அவ்வளவு பிரதேசமும் சோழப் பேராட்சி ஒன்றுக்கே உட்பட்டிருக்கவேண்டும் என்பதில் நம்மையெல்லாம் காட்டிலும் கொடும்பாளுர் அரசருக்கு அவா அதிகம். மூன்று பேராக இருந்த நாம் ஐந்து பேராக வளர்ந்திருப்பது கூட அவருடைய முயற்சியின் விளைவேயாகும். கீழைப்பழுவூர்க் கண்டன் அமுதனையும், பரதுரருடையானையும் நாம் நல்வரவு கூறி நம்முடைய கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். அவ்வாறு சேர்த்துக்