பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

383


“தேவி தாங்கள் இன்னும் உணவைக்கூட முடித்துக் கொள்ளவில்லையே? அதற்குள்.”

“பசி இப்போது வயிற்றுக்கு அல்ல, ஆன்மாவுக்கு! கேள்வி கேட்டுக்கொண்டு நிற்காதே, போய் உடனே ஏற்பாடு செய்.”

வண்ணமகள் பதில் பேச வாயிழந்து சிவிகை ஏற்பாடு செய்வதற்காகச் சென்றாள். படை வீரர்கள் துணை வராமல் தனியாக மகாராணி எங்கும் புறப்படக் கூடாதென்று அன்று கன்னியாகுமரியில் வந்த ஆபத்துக்குப் பின் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் அப்போதிருந்த மனநிலையில் யாருக்கும் தெரியாமல், யாருடைய பாதுகாப்பும் இன்றிச் சுசீந்திரத்துக்குப் போய்வர முடிவு செய்திருந்தார் மகாராணி. மகாமண்டலேசுவரருக்கோ, மெய்க் காவற் படை வீரர்களுக்கோ தன் புறப்பாட்டைப்பற்றி அவர் தெரிவிக்கவே இல்லை! பரிவாரங்கள் புடைசூழ ஆரவாரம் நிறைந்த அரச மரியாதைகளோடு கோயிலுக்குச் செல்வது, “நான் மகாராணி. எனக்குப் பெருமை, பீடு, பதவி எல்லாம் உண்டு” என்று பெருமையை அநாவசியமாக அறிவித்துக்கொண்டு போவதுபோல் வெறுப்பை உண்டாக்கிற்று. அவர் எண்ணினார்; -

‘உலகத்தின் கண்களுக்கு நான் பாண்டிமாதேவி, இராசசிம்மனின் கண்களுக்கு அன்னை. ஆனால் தெய்வத்தின் கண்களுக்கு நான் ஓர் அபலைப் பெண். எளியவன் செல்வந்தனுக்கு முன் இரவல் நகைகளையும், ஆடை அணிகளையும் பூண்டு தன்னைப் பெரிதாகக் காண்பித்துக்கொள்ள முயல்வது போல் அபலையாக இருந்துகொண்டு அரசியாகப் பெருமை கொண்டாடக் கூடாது: - - -

சிவிகையில் புவனமோகினி ஒருத்தியை மட்டும் துணைக்கு ஏற்றிக்கொண்டு தனிமையாகப் புறப்பட்டார் வான்வன்மாதேவி. கோட்டையின் இரண்டு வாயில்களிலும் மிகுந்த காவல் வீரர்கள், “ ஐயோ! இப்படி மகாராணி தனிமையாகப் போகிறார்களே?’ என்று வருந்தத்தான்