பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


ஆண்டுகளில் எவருக்குமே அளிக்கப்பட வில்லை. அதாவது “கைமுக்குத் தண்டனை பெறும் அளவுக்கு இந்தச் சில ஆண்டுகளில் இந்தப் பகுதியில் யாரும் குற்றம் செய்யவில்லை. ‘சென்ற திங்களில் திருவாட்டாறு ஆதிகேசவ விண்ணகரத்தில் வழிபாட்டுரிமை பெற்ற சோழிய அந்தணர் ஒருவருடைய புதல்வன் அதே விண்ணகரக் கோயிலின் விலைமதிப்பற்ற பொன் அணிகலன்களைத் திருடிக்கொண்டு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் திடீரென்று எங்கோ மறைந்து விட்டான். சோழிய அந்தணர் தம் மகன்தான் திருடிச்சென்றிருக்கிறான் என்பதனை அறிந்துகொண்டு விட்டார். புதல்வன் செய்தது குற்றமே என்று தயக்கமின்றிச் சுசீந்திரம் தெய்வ நீதிமன்றத்தாருக்கு அக்குற்றத்தை அறிவித்துவிட்டார் அவர். எனினும் குற்றம் செய்த சோழிய இளைஞன் அகப்படவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் காந்தளூரில் ஒரு பொற்கொல்லன் வீட்டில் விண்ணகரத்துப் பொன் நகைகளை அழித்து உருக்கி விடுவதற்கு முயன்று கொண்டிருந்தபோது அந்தச் சோழிய இளைஞனைப் பிடித்து விட்டார்கள். இன்று தீர்ப்புக் கூறுகிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் நடைபெறும் ‘ ைகமுக்குத் தண்டனை யாகையால் மக்கள் திருவிழாக்கூட்டம் போல் பார்ப்பதற்குக் கூடிவிட்டார்கள். கைமுக்கு மண்டபத்துப் பக்கம் போவதற்கே பரிதாபமாக இருக்கிறது” என்றார் அர்ச்சகர். . . . . . .

கல்மனம் படைத்த அந்தச் சோழிய அந்தணர் என் மகனானால் என்ன? வேறெவனானால் என்ன? செய்தது . தவறு. பெற வேண்டியது தண்டனைதான் என்று பாசத்தை மறந்து நியாயத்தை ஒப்புக்கொள்கிறார். ஆனால். நான் உங்களிடம் எப்படிச் சொல்வேன், மகாராணி! அவனைப் பெற்ற அந்தச் சோழிய நங்கையின் கதறல் அந்த மண்டபத்தையே சோக,வெள்ளத்தில் மூழ்கச் செய்திருக்கிறது. அந்தத் தாய் தூணில் முட்டிக்கொள்கிறாள், முறையிடுகிறாள். என் மகன் கையை நெய்க் கொப்பரைக்குள் விடுமுன் நானே ‘கொப்பரையின் கொதிக்கும் நெய்க்குள் பாய்ந்து உயிரை