பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


எண்ணிப்பார்த்தார் மகாராணி. எண்ணம் நிரம்பிப் பெருகியது. -

“தாய்க்குப் பெண்ணாகப் பிறந்து, தானும் தாயாகித் தனக்குப் பிறந்த பெண்களையும் தாயாக்கித் தன் தாய் போன இடத்துக்குப் போய்ச் சேருவதுதான் உலகத்துப் பெண் இனத்தின் அவலக் கதை. உலகத்தின் முதல் பெண் பிறந்த நாளிலிருந்து இந்தத் துன்பக் கதை தொடர்ந்துகொண்டே வருகிறது. இந்தத் தொடர்பு முடியும் போது உயிர்க்குல்மே அழிந்துவிடும். கனமான பெரிய மாங்காய் கனமற்ற சிறிய காம்பில் தொங்கிக் கொண்டிருப்பது போல் தாய்மை என்ற ஒரு மெல்லிய அடிப்படையில் இந்தத் தொல்லைப் பழம்பெரும் பூமி இன்னும் தன் உயிர்த்துடிப்பை இழந்து விடாமல் இருந்து கொண்டிருக்கிறது.” . . .

சிந்தனைப் பெருக்கின் ஊடே எப்போதோ கேள்விப் பட்டிருந்த தாயைப் பற்றிய செய்யுள் ஒன்று மகாராணி யாரின் நினைவில் குமிழியிட்டது.

“எனக்குத் தாயாகியாள் என்னை யீங்கிட்டுத் தனக்குத் தாய்நாடியே சென்றாள்-தனக்குத்தாய் ஆகியவளும் அதுவானால் தாய்த்தாய்க் கொண் டேகும் அளித்திவ் வுலகு” நீராழி யுடுத்த நெடும்புவனமாகிய இந்த மண்ணுலகம்இது தாய்க்குலம் அளித்த பிச்சை. அந்த தாய்க்குலத்தில் ஒருத்தி துன்பம் அடைய அதை மற்றொருத்தி பார்த்துக் கொண்டிருப்பதா? நீயும் ஒரு தாயாக இருந்தால்-உனக்கும் ஒரு மகன் இருந்தால்-அவனும் திருடி விட்டு அகப்பட்டுக் கொண்டிருந்தால்? இப்படிக் குத்திக் காட்டிக் குமுறிக் கேட்ட பின்பும் வாளா இருக்கலாமா? - - - -

மகாராணியின் உள்ளத்தில் ஒரு பெரிய போராட்டம், நினைவில் வேதனை. சிந்தனையில் தடுமாற்றம். அப்படியே பிரமை பிடித்தவர்போல் சிந்தனையிலிருந்து விடுபடாமல் நின்றார் அவர். - -

“என்னம்மா திகைக்கிறீர்கள்? என் கேள்விக்கு மறு மொழி சொல்வதற்கு உங்களுக்கு விருப்பமில்லையா?” அந்தப்