பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

413


வெளிக்குத் தெரியாமல் மகாமண்டலேசுவரரிடம் ஒளிந்து கொண்டிருந்தது. .

பேசிக்கொண்டே சென்று அவரும் சீவல்லபமாறனும் அரண்மனைக் காவற்படை மாளிகைக்குள் நுழைந்தனர். மாளிகை முன்றிலில் சீவல்லபன் தேர்ந்தெடுத்து நிறுத்திவிட்டு வந்திருந்த வீரர்கள். ஐம்பதின் மரும் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தனர்.

“இதோ இவர்கள்தான், தாங்கள் கூறிய செயலுக்காகத் தேர்ந்தெடுத்து நிறுத்தப்பட்டிருப்பவர்கள்” - சீவல்லபன் அவர்களைச் சுட்டிக்காட்டினான். மகாமண்டலேசுவரர் அந்த வீரர்களுக்கு முன்னால் ஒரு சொற்பொழிவே செய்துவிட்டார். “அன்பார்ந்த மெய்க்காவற்படை வீரர்களே! நீங்கள் சூழ்ச்சியும், சாதுரியமும் மிக்க பெரிய காரியத்தைச் செய்யப் பெறுவதற்காக அனுப்பப்படுகிறீர்கள். உயிரின் மேலும் உடலின் மேலும் பற்றுள்ளவராக இருந்தாலும் துணிவோடு செல்லுங்கள். முன்பு பாண்டி நாடாக இருந்து இப்போது வடதிசையரசர்களினால் கைப்பற்றி ஆளப்படும் பகுதிகளிலும், கோனாட்டுக் கொடும்பாளுரிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் கூட்டமாகவோ, தனித் தனியாகவோ சென்று மறைந்திருந்து உங்களால் இயன்ற குழப்பங்களையும் கலவரங்களையும் செய்யுங்கள். நாம் அவர்கள்மேல் படையெடுக்கப் போவதாகவும், பிறகு ஈழத்திலிருந்தும், சேர நாட்டிலிருந்தும், நமக்குப் பெரும் படையுதவி கிடைக்கப்போவதாகவும் செய்திகளைப் பரப்பி அவர்களை நம்பவையுங்கள். நீங்கள் ஒருவர் கூட முடிந்தவரை எதிரிகள் கையில் அகப்பட்டுக் கொண்டு விடாமல், இந்த வேலைகளைச் செய்யவேண்டும். தப்பித்தவறி யாராவது அகப்பட்டுக் கொண்டால் சதையைத் துண்டு துண்டாக்கினாலும் உண்மைகளைச் சொல்லி நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தைச் செய்யக்கூடாது. நம் நாட்டு வடக்கு எல்லையில் கொற்கையிலும், கரவந்தபுரத்திலும், அவர்கள் செய்கின்ற குழப்பங்களைப்போல் நீங்கள் அங்கே போய்ச் செய்யவேண்டும். அவ்வப்போது அங்கே உங்களுக்குக் கிடைக்கும் உளவுச்