பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


அல்லவா? இதோ கொஞ்சம் என் பக்கமாகத் திரும்பிப் பார்த்துவிட்டு, நான் என்ன செய்கிறேனென்று கவனியுங்கள்.” சோழனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சிறிது வெறுப்பு நிழலாடும் பார்வையோடு திரும்பி நோக்கினான் கொடும்பாளுர் மன்னன். மரச் சட்டத்திலிருந்து ஒவ்வொன்றாக மூன்று கிளிக் குஞ்சுகளை எடுத்துக் கூண்டுக்குள் விட்டுக் கதவை அடைத்தபின், குறிப்பாக எதையோ சொல்லும் பொருள் செறிந்த நோக்கினால் சோழ மன்னன் கொடும்பாளுரானின் முகத்தைப் பார்த்தான். அந்தப் பார்வையை விளங்கிக் கொள்ளாமல், “ உங்களுடைய இந்தச் செயலுக்கு என்ன அர்த்தமென்று எனக்கு விளங்கவில்லையே?’ என்று கேட்டான் கொடும்பாளுரான்.

“கொடும்பாளுர் மண்ணுக்கே குறிப்பறியும் உணர்ச்சி அதிகம் என்பார்கள். ஆனால் அந்த மண்ணை ஆளும் அரசராகிய உங்களுக்கே என் குறிப்புப் புரியவில்லை?”

சோழன் குத்திக் காட்டிப் பேசியது வேதனையைக் கொடுத்தாலும், அந்தக் குறிப்புச் செய்கையின் பொருள் புரியக் கொடும்பாளுர் மன்னனுக்குச் சிறிது நேரமாயிற்று. அது புரிந்ததும்தான் அவன் முகத்தில் மலர்ச்சி வந்தது.

“புரிந்துவிட்டது. அப்படியே செய்துவிடுகிறேன்” என்று கிளிக் கூண்டையும் அடைப்பட்ட மூன்று குஞ்சுகளையும் பார்த்து விஷமத்தனமாகச் சிரித்துக்கொண்டே வெளியேறினான் கொடும்பாளுர் மன்னன். அடுத்த கால் நாழிகைக்குள் கொடும்பாளுர்க் கோட்டையின் ஒளி நுழைய முடியாத பாதாள இருட்டறைகளின் இரகசிய அறை ஒன்றில் அந்த மூன்று ஒற்றர்களையும் கொண்டு போய் அடைத்துவிட்டுத்தான் திரும்பி வந்தான் அவன்.

நீண்ட நேரமாகச் சூழ்ச்சிகளிலும், அரசியல் சிந்தனைகளிலுமே ஆழ்ந்து போயிருந்ததன் காரணமாக, வடதிசையரசரின் கூட்டணியைச் சேர்ந்த அந்த ஐவருக்கும் களைப்பு ஏற்பட்டிருந்தது. ஒரு மாறுதல்-மனமகிழ்ச்சிக்குரிய ஒரு பொழுதுபோக்கு-அப்போது அவர்களுக்குத் தேவைப் பட்டது. தங்களையும் தங்கள் அரசியல் கவலைகளையும் மறந்து