பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


இப்படிப் புதுக் கவலைகளும், பயமும் ஏற்படும் என்று தெரிந்திருந்தால் முதலிலேயே ஒட்டுக் கேட்காமல் இருந்திருப்பாள்.

கொம்பு முளைக்காத குட்டிப் பருவத்துப் புள்ளிமான் போல் அவலமற்றுக் கவலையற்று அந்தத் தீவின் எழிலரசியாய்த் துள்ளித் திரியவேண்டிய அவளுக்குக் கவலை ஏன்? பயம் ஏன்? கலக்கம் ஏன்? எவனைப் பற்றிய நினைவுகள் அவள் நெஞ்சில் நிரந்தரமாக ஓடிக் கொண்டிருக்கின்றனவோ, அவனையே கொலை செய்வதற்கு முயல்கிறவர்களைப்போல் அவர்கள் பேசிக்கொண்டு சென்றதனால்தான் அவள் கவலைப் பட்டாள், பயந்தாள், கலங்கினாள். அந்த முரடர்களுடைய பேச்சை ஒட்டுக்கேட்ட நாளிலிருந்து அவளுக்கு ஒரு காரியமும் ஒடவில்லை.

ஐயோ! அந்த முரடர்களால் நடுக்கடலில் அவருடைய கப்பலுக்கு ஒரு துன்பமும் நேராமலிருக்க வேண்டுமே! அவர்கள் கையில் அகப்பட்டுக்கொண்டால் அவரைக் கொல்லாமல் விடமாட்டார்களே? அவருடைய விரோதிகள் எவரோ அவரைக் கொன்றுவிடுவதற்கென்றே அந்த முரட்டு ஆட்களைத் துாண்டிவிட்டு அனுப்பியிருக்கிறார்கள் போலிருக்கிறது. எல்லா நன்மையும் கொடுக்கும் . அந்த வலம்புரிச் சங்கு அவர் கையிலிருக்கிறவரை அவரை எந்தப் பகை என்ன செய்துவிட முடியும்? கடவுளின் கருணையும், அவரையே நினைத்துக் கொண்டிருக்கும் எனது நல்ல காலமும்தான் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று தானே தனக்குள் சிந்தித்துச் சிந்தனைச் சூட்டில் - வெந்து கொண்டிருந்தாள் மதிவதனி, அதன் காரணமாக எந்தக் காரியத்தைச் செய்தாலும் சுயநினைவு இன்றிச் செய்துகொண்டிருந்தாள் அவள் சிந்தனை ஓரிடத்திலும், செயல் ஓரிடத்திலுமாகப் பைத்தியக்காரி போல் கடையிலும் வீட்டிலும், கடற்கரை மணற் குன்றுகளிலும் திரிந்து கொண்டிருந்தாள் அவள். அந்தத் தீவின் கரையோரத் தென்னை மரங்களிலிருந்து பறந்து செல்லும் கிளிகளின் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம், “என் மனத்துக்கும் இப்படி