பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

509


விண்ணையும், விண்ணுக்கு மண்ணையும் தெரியவிடாமல் அடர்ந்து செழுமையாய்ச் செம்மையாய்த் தண்மையாய் வளர்ந்திருந்தன. அந்த ஆலமரங்கள்.

அந்த இடத்தில் இடையாற்றுமங்கலத்தை ஒட்டிப் பறளியாற்றங்கரையில் சிறிது தொலைவுவரை பரவி நிற்கும் இயற்கையின் எழில்களை, பசுமையின் செல்வங்களைவளமையின் வகைகளை-உண்மையாக அனுபவிக்க வேண்டுமானால் ஓவியனின் கண்களும், கவியின் உள்ளமும், ஞானியின் உள்ளுணர்வும், குழந்தையின் பேதைமையும் வேண்டும்-அறிவின் எல்லைக் கோடாகிய மகாமண்டலே சுவரரின் இருப்பிடத்தைச் சுற்றிலும் இயற்கை செலுத்துகிற மரியாதைகள்தான் இப்படி மலர்ச் செடிகளாகவும் மரக் கூட்டங்களாகவும், பசுமைப் பெரும் பரப்பாய்த் தோன்றிப் பிரகிருதி என்னும் காணாக் கவிஞன் எழுதாத எழுத்தால் இயற்றி வைத்த பயிலாக் கவிதைகளாய்ப் பரந்து கிடக்கின்றனவோ? இவ்வளவு அழகிலும் அந்தச் சூழ்நிலையில் பறளியாற்று நீர் ஒலி, பறவைகளின் குரல்கள், மரங்கள் ஆடும் ஓசை தவிர செயற்கையான வேறு மண்ணுலக ஒசைகளே இல்லாத ஒரு தனிமையின் அடக்கம் இடையாற்றுமங்கலம் நம்பியின் மன ஆழத்தில் விளங்கிக் கொள்ள முடியாத தன்மைபோல் வியாபித்திருந்தது.

மங்கலம் என்றால் திரு நிறைந்தது, தூயது, அழகியது என்று பொருள். இடையாற்றுமங்கலம் அந்தப் பொருட் பொருத்தப் பெருமையைக் காப்பாற்றிக் கொண்டு காட்சியளித்தது. . . . . . . .

ஆபத்துதவிகள் தலைவனும் அவனுடன் வந்தவர்களும் பறளியாற்றங்கரை ஆலமரக் கூட்டத்தின் இடையே துழைந்தபோது, மாலை நேரமாக இருந்தாலும் பெரிதும் ஒளி குன்றி இருள் படர ஆரம்பித்திருந்தது. வழக்கமாகக் கரையிலிருந்து இடையாற்றுமங்கலத்துக்குப் படகு புறப்பட்டுப் போகும் நேரடியான துறை வழியே செல்வதற்கு அவர்கள் தயங்கினார்கள். ஆற்றில் சிறிது தொலைவு தள்ளிக் குறுக்கு வழியாகப் படகைச் செலுத்திக் கொண்டு போய்