பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/543

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 54?

வாங்கிக் கொண்டு சென்றான். அம்பலவன் வேளானை இடையாற்றுமங்கலத்துக்கு அனுப்பிய பின்பு வண்ணமகள் புவனமோகினியைத் தம்முடைய இருப்பிடத்துக்கு வரவழைத்தார் அவர்.

புவனமோகினி வந்து வணங்கினாள்: ‘பெண்ணே : உன்னிடம் ஒரு செய்தி விசாரித்துத் தெரிந்து கொள் வதற்காகக் கூப்பிட்டேன். ஆபத்துதவிகள் தலைவன் மகர நெடுங்குழைக்காதன் இங்கே அரண்மனையில்தான் இருக்கிறானா? உனக்குத் தெரிந்திருக்குமே?” என்று அவர் அந்தப் பெண்ணிடம் கேட்டார். ஆபத்துதவிகள் தலைவனின் பெயரை அவருடைய வாயிலிருந்து கேள்விப்பட்ட உடனே அந்தப் பெண்ணின் முகத்தில் பயத்தின் உணர்ச்சியலைகள் குமிழியிட்டுப் பரவுவது போன்றதொரு சாயல் பரவியது.

“பயப்படாமல் சொல், அம்மா!” மீண்டும் அவளைத் து.ாண்டினார் அவர்.

“சுவாமி! சென்ற சில நாட்களாக அந்த முரட்டு மனிதரை அரண்மனை எல்லையிலேயே நான் காணவில்லை. ஆனால் மறுபடியும் இன்று காலையில் இங்கு பார்த்தேன்.” என்று மருண்ட பார்வையோடு முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்துக் கொண்டே மெல்ல அவருக்குப் பதில் சொன்னாள் வண்ணமகள். . -

“இவ்வளவுதான் உன்னிடமிருந்து எனக்குத் தெரியவேண்டும். இனிமேல் நீ போகலாம்.”

புவனமோகினி மறுபடியும் அவரை வணங்கிவிட்டு வந்த சுவடு தெரியாமல் திரும்பிச் சென்றாள். அவள் சென்றபின் சிறிது நேரம் இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு அளவாக அடிபெயர்த்து வைத்துக் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார் அவர் மனத்தில் அளவாகத் தெளிவாக வேகமாகச் சிந்தனைகள் ஓடும்போது இப்படி நடந்து கொண்டே திட்டமிடுவது அவரது வழக்கம், சிறிது நேரத்தில் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவராக அங்கிருந்த காவலன் ஒருவனைக் கைதட்டி அழைத்தார். அவன் அருகில் வந்ததும்