பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

549


“அதில் என்ன சந்தேகம்? நமது வசதிக்காக நாம் நம்முடைய ஒற்றர்களைத் தெற்கே அனுப்பியிருக்க வில்லையா? அவர்களும் அதே வசதிக்காக ஒற்றர்களை இங்கே அனுப்பத்தானே செய்வார்கள்? என்று சோழன் பதில் கூறினான்.

“இளவரசன் இராசசிம்மன் படை உதவி கோரி இலங்கைக்குப் போயிருக்கிறானா? அல்லது வஞ்சி மாநகரத்துக்குப் போய் மலைநாட்டுச் சேரர் படையைக் கொண்டுவரச் சென்றிருக்கிறானா? இரண்டுமே இல்லாமல் தான் தங்கியிருப்பது வெளியே பரவிவிடாமல் தென்பாண்டி நாட்டிலேயே தங்கியிருக்கிறானா?” என்று அரசூருடையான் கேட்டான்.

‘எப்படியும் குமாரபாண்டியன் தெண்பாண்டி நாட்டு எல்லைக்குள் இருக்க முடியாது! ஏனென்றால் நாம் அனுப்பிய ஆட்கள் இலங்கை போகும் வழியில் செம்பவழத் தீவில் அவனைச் சந்தித்துக் கொல்ல முயன்றிருக்கிறார்கள். ஒன்று அவன் இலங்கைக்குப் போய்க்கொண்டிருக்க வேண்டும் அல்லது இலங்கையிலிருந்து வந்து கொண்டிருக்க வேண்டும். இரண்டுமில்லாவிட்டால் செம்பவழத் தீவிலேயே தங்கி மறைந்து வசிக்கவேண்டும்” என்று கொடும்பாளுரான் தன் அநுமானத்தைச் சொன்னான்.

‘நாம் இன்னும் அதுமானங்களிலேயே உழன்று கொண்டிருப்பதில் பயனில்லை. சிந்தித்துக்கொண்டே இருக்கும் வரையில் அநுமானங்கள் பயன்படும். செயலில் இறங்கும் போது தீர்மானங்களுக்கு வந்துவிட வேண்டும். இப்போது நாம் முடிவான திட்டத்துக்கு வந்து எண்ணங்களாலும் செயல்களாலும் ஒருமுகமாக ஒன்றுபடுகிற நேரம். எப்படியானாலும் படையெடுத்துச் சென்று பாண்டி நாட்டின் தென் கோடிவரை வென்றே தீருவது என்பது நம் நோக்கமாகிவிட்ட பின் தயங்குவதற்கு இடமில்லை. என் தீர்மானத்தை இப்போதே உங்களிடம் சொல்லிவிடுகிறேன். தஞ்சையிலும், பழையாறையிலும், உறையூரிலுமாகப்