பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


அவருடைய மனத்தில் கொதிப்பு மூண்டது. கொதிப்போடு பேசலானார் அவர்:-"முதலில் மகாமண்டலேசுவரருக்கு வேண்டாதவர்கள் எல்லோரையும் நம்மோடு சேர்த்துக் கொள்ளவேண்டும். கட்சி கட்டிக்கொண்டு கிளம்பினால் தான் எதையும் திடமாக எதிர்க்க முடியும். தளபதி வல்லாள தேவனுக்கும், மகாமண்டலேசுவரருக்கும் ஏதோ சில பிணக்குகள் இருப்பதாகத் தெரிகிறது. தென்பாண்டி நாட்டின் படைத் துறையைச் சேர்ந்த வேறு சிலருக்கும் இதேபோல் அவர்மேல் ஒருவிதமான வெறுப்பு இருக்கும் போலும். அவற்றையெல்லாம் நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.”

“மாறனாரே! நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், தளபதி வல்லாளதேவன் மகா மண்டலேசுவரரை வெறுக்கிறான் என்பதற்காக நம்மை ஆதரிப்பான் என்று நாம் எதிர்பார்ப்பது தவறு. மகாமண்டலேசுவரர் என்ற பதவியையும், வளைந்து கொடுக்காத அறிவையும்தான் அவன் வெறுக்கிறான். நாமோ . அந்தப் பதவியையும், அந்த மனிதரையும் அந்த அறிவையும் எல்லாவற்றையுமே வெறுக்கிறோம். வல்லாளதேவன் சூழ்ச்சி களையும் அதிகாரத்தையும் எதிர்ப்பவனாக இருந்தாலும் கடமையையும், நேர்மையையும், ஒரளவு போற்றுகிறவனாக இருப்பான்” என்று பரிமேலுவந்த பெருமாள் கழற்கால் மாறனாருக்கு மறுமொழி கூறினார். * ,

‘நான் சொல்லுவது என்னவென்றால் எட்டுத் திசையிலிருந்தும் ஒரே குறியில் கூர்மையான அம்புகளைப் பாய்ச்சுவதுபோல் மகாமண்டலேசுவரர் மேல் எதிர்ப்பு களையும், துன்பங்களையும் பாய்ச்சவேண்டும். அவற்றைத் தாங்க முடியாமல் அவராகவே பதவியிலிருந்து விலகி ஒடவேண்டும்.” - - -

“மாறனாரே! அவர் அப்படித் தாங்கமுடியாமல் விலகி ஓடிவிடுவாரென்று நீங்கள் நினைப்பதே பிழையான நினைவு. நாமெல்லாம் சில சந்தர்ப்பங்களில் விழித்துக் கொண்டிருக்கும் போதே தூங்கிவிடுவோம். ஆனால் அவரோ தூங்கிக்