பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/557

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

555


கொண்டிருக்கும்போதும் விழித்திருப்பார். அவரை ஏமாற்றுவது அவ்வளவு எளிதில்லை” என்று நன்கணிநாதர் மறுபடியும் மகாமண்டலேசுவரரின் புகழ் பாடத் தொடங்கியபோது கழற்கால்மாறனாரின் முகம் சுருங்கிச் சிறுத்தது. அந்த முகத்தில் கடுமையான வெறுப்புப் பரவியது. “முதல் காரியமாக எதிரியின் பெருமையைப் புகமும் இந்த ஈனத்தனம் நம்மிடமிருந்து ஒழியவேண்டும்” என்று உரத்த குரலில் எரிந்து விழுந்தார் பொன்மனைக் கூற்றத் தலைவர். அந்தக் குரலிலிருந்த வெறுப்பின் வேகம் மற்ற மூன்று பேரையும் நடுங்கச்செய்தது. மூன்று பேரும் தாங்கள் பேசுவதை நிறுத்திக்கொண்டு மெளனமாக இருக்கத் தலைப்பட்டனர். கழற்கால் மாறனாரும் அந்த மெளனத்தைத் தான் விரும்பினார். அம்மூன்று பேரும் தமக்கு அடங்கியிருந்து தாம் சொல்பவற்றை மட்டும் கட்டளைகளைப் போல் கேட்க வேண்டுமென்றே அவர் விரும்பினார். அவர்கள் பதில் சொல்வதையோ சொந்த அபிப்ராயங்களைச் சொல் வதையோ அவர் விரும்பவில்லை.

“ஒப்புரவு மொழி மாறா ஒலையை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று கூறியதுமே நாம் ஒத்துழையாமையும் எதிர்ப்பும் புரிவோம் என்பதை மகாராணியிடம் சொல்லி விட்டுத்தான் வந்தேன். நான் மகாமண்டலேசுவரரையும் அருகில் வைத்துக்கொண்டே முன்பு எனக்கு அளிக்கப் பட்டிருந்த தென்னவன் தமிழ்வேள் பாண்டிய மூவேந்த வேளார்’ என்ற பட்டத்தையும், ஏனாதி மோதிரத்தையும் திருப்பியளித்துவிட்டேன். அப்போது அந்த இடையாற்றுமங்கலத்து மனிதர் என்னைக் கேவலப்படுத்திப் பேசிய பேச்சுகளை நினைத்தால் இப்போதுகூட என் இரத்தம் கொதிக்கிறது” என்று சொல்லிக் கொண்டே வந்தவர், பேச்சை நடுவில் நிறுத்திக்கொண்டே அந்த மூன்று பேருடைய முகங்களையும் பார்த்துக்கொண்டார். -

பின்பு மேலும் தொடர்ந்து கூறலானார்:-"இனிமேல் மகாமண்டலேசுவரருக்கு எதிராக நாம் செய்யவேண்டிய