பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/566

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


பேராற்றல் அந்தப் பார்வைக்கு இருக்கிறது. தென்பாண்டி நாட்டு அரசியல் தொடர்புடைய எல்லோருக்குமே காரணமற்ற ஒருவகை அசூயை மகாமண்டலேசுவரர்மேல் இருக்கிறது. குழந்தாய்! அவரைப் போல் ஒரு திறமையான மனிதர் இல்லாவிட்டால் உடனடியாக நேர இருந்த வடதிசைப் பகைவர் படையெடுப்பைக் காலந்தாழ்த்தியிருக்க முடியாது. அவர் மகாமண்டலேசுவரராயிருக்கிற காலத்திலேயே நீ வந்து முடிசூட்டிக் கொண்டு பொறுப் பேற்றால் உனக்கு எத்தனையோ வகையில் பயன்படும். உலகம் நிலையாதது, நம்முடைய எண்ணங்களின் படியே எதுவும் நடப்பதில்லை என்பதையெல்லாம் நான் உணர்கிறேன், குழந்தாய்! ஆனால் உன்னைப்பற்றி நினைவு வரும்போது மட்டும் என்னால் அவற்றை நம்பமுடிவதில்லை. உலகம் நிலையானது. என் அருமைப் புதல்வனைப் பொறுத்த வரையில் நான் எண்ணியிருக்கிறபடியே எல்லாம் நடைபெறும் என்றே நினைத்து வருகிறேன். நான். நீ என்னை ஏமாற்றிவிடாதே என் நினைவுகளையும் கனவுகளையும் ஏமாற்றிவிடாதே”. யாரோ கூப்பிடுவது போலிருந்தது.

“தேவி! இதென்ன? என்னென்னவோ பிதற்றுகிறீர்களே! நீங்களாகவே பேசிக்கொள்கிறீர்களே! உங்களுக்கு ஏதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறதா? ஒரு வேளை மாலையில் குளிர்ந்த காற்றுப் படும்படி நந்தவனத்தில் உலாவியது ஒத்துக்கொள்ளவில்லையா?” என்று கேட்டுக் கொண்டே புவனமோகினி கட்டில் அருகே நின்றாள். மகாராணிக்கு நாணமாக இருந்தது. இராசசிம்மனிடம் பேச நினைத்தவைகளையெல்லாம் தூக்கத்தில் வாய் சோர்ந்து உளறிவிட்டிருக்கிறோம் என்று அவருக்கு அப்போதுதான் புரிந்தது.

புவனமோகினி மகாராணிக்குத் துணையாகக் கட்டிலுக்குக் கீழே தரையில் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். மகாராணிக்கு மறுபடியும் கோட்டாற்றுப் பண்டிதர் கூற்று