பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/567

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

565


“நாளைக்கு நடப்பதைப்பற்றி இன்றைக்கே திட்ட மிடாதீர்கள். நாளைய தினம் என்பது இனிமேல் வருவது. நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லாமலும் போகலாம் அது!”

மகாராணியின் அறிவுமயமான உள்ளம் இந்தத் தத்துவத்தை ஒப்புக்கொண்டது. ஆனால் உணர்வு மயமான உள்ளமோ ஒப்புக்கொள்ள மறுத்தது. நாளை என்ற ஒன்று இல்லாவிட்டால் அப்புறம் இந்த உலகத்தில் என்ன இருக்கிறது? அறியமுடியாத உண்மைகளும், தெரிய முடியாத எதிர்காலமும் இருப்பதனால் அல்லவா வாழ்க்கை சாரமாக இருக்கிறது? தாம் சுமக்கின்ற பொருள்களின் உயர்வும் பெருமையும் தெரியாமல், குங்குமமும் கற்பூரமும் சுமக்கும் கழுதைகளைப்போல் வாழ்வதனால்தான் சாதாரண மனிதர்களால் வாழ்க்கையின் நாளைய தினங்களைக் கற்பனை செய்ய முடிகிறது.” . .

இப்படி என்னென்னவோ எண்ணிக்கொண்டு படுக்கையில் புரண்டார், மகாராணி. சிந்தனைகளைத் தனக்குச் சாதகமாகத் தன் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் வளைத்துச் சிந்திக்கத் தொடங்கும்போது, மனத்துக்கு ஒருவிதமான போலி உற்சாகம் மகிழ்ச்சி மயக்கமாக ஏற்படும். மகாராணியின் மனத்தில் அப்படி ஓர் உற்சாகம் அப்போது ஏற்பட்டிருந்தது. மறுநாள் பொழுது விடிந்ததுமே இராசசிம்மன் ஓடிவந்துவிடப்போகிற மாதிரியும், உடனே அவனுக்கு முடிசூட்டிக் கண்டு மகிழப் போவதாகவும் தன் மனம் கற்பனை செய்கிற எல்லா நிகழ்ச்சிகளுமே உடனே நடந்துவிடப் போவதுபோல் ஒரு மனநிலை ஏற்பட்டது. கண்களை விழித்துக்கொண்டே கட்டிலில் படுத்திருந்தவருக்கு எதிரே சிறிதாக மங்கலாக எரிந்துகொண்டிருந்த துரண்டா விளக்கின் சுடர் தெரிந்தது. இருட்டில் மலர்ந்த தங்க மலர் ஒன்றின் ஒற்றைத் தனி இதழ் காற்றில் அசைவதுபோல் கண்ணுக்கு அழகாகத் தெரியும் அந்தச் சுடரையே பார்ப்பது இன்பமாக இருந்தது மகாராணிக்கு. சுடரா அது: நெருப்புத் தாயின் பெண் குழந்தை, நெருப்பில் ஏதோதெய்வீக ஆற்றல் இருக்கிறது; அதனால்தான் அதை வணங்குவதற்கு ஏற்ற