பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/569

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

567


தொடமுடியாத உயரத்தில் தூக்கம் கலைகிறவரை அந்தப் பறவைகள் பறந்து கொண்டே இருந்தன.

இராசசிம்மன் எட்டுத் திசையும் வெற்றி வாகை சூடித் திரிபுவனச் சக்கரவர்த்தியாகிறான். திருமணம் புரிந்து கொள்கிறான். அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. வானவன்மாதேவி தம் பேரனைக் கொஞ்சுகிறார். இராச சிம்மா! நீ குழந்தையாக இருந்தபோது சிரித்ததைப் போலவே உன் மகனும் சிரிக்கிறான்’ என்று புதல் வனிடம் வேடிக்கையாகச் சொல்கிறார் மகாராணி, ‘அம்மா! என் மகனை என்னைக் காட்டிலும் பெரிய வீரனாக்கப் போகிறேன் பாருங்கள். ஈழத்தையும் கடாரத்தையும்கூட அவன் வென்று வாகை சூடுவான் என்று மகனைப்பற்றிப் பெரும்ையடித்துக் கொள்கிறான் இராசசிம்மன்.

செய்தாலும் செய்வான், அப்பா! வாளாலும் வேலாலும் வெல்வதற்கு முன் சிரிப்பாலேயே அவைகளை வென்று விடுவான் போலிருக்கிறது உன் மகன் என்று புன்னகையோடு பதில் சொல்கிறார் மகாராணி.

இவ்வளவில் மகாராணி கண்விழித்தார். விடிந்து வெயில் பரவி வெகு நேரமாயிருந்தது. படுத்த நிலையிலேயே கட்டிலில் கண் விழித்த அவர் பார்வையில் எதிரேயிருந்த அந்தத் தீபம்தான் பட்டது, அவர் திடுக்கிட்டார். அந்த ஒளியின் குழந்தை அணைந்து அழுது புகையாகி, நூலிழைத்துக் கொண்டிருந்தது. என்றுமே அணையாத விளக்கு அது. அன்று அணைந்திருந்தது. கண்ட கனவுக்கும் அதற்கும் பொருத்தமி ஒல்லாமல் பட்டது. மனத்தின் வேதனை அலைகளை அடக்கிக்கொண்டு அந்த அன்னை காலத்தின் அலைகளில் மிதப்பதற்காக எழுந்தாள். நீராடிய ஈரக் கூந்தலோடு கையில் பூக்குடலையுடன் புவனமோகினி அப்போது அங்கே வந்தாள்.

“பெண்ணே! இன்றைக்கு இந்த அணையா விளக்கு அணையும்படி விட்டு விட்டாயே, நீ பார்க்கவேயில்லையா?” என்று கேட்டார் மகாராணி.