பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/597

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

595


இருக்கவே இயலாது, அம்மணி! என் மதிப்பிற்குரியவரும், உங்கள் தந்தையுமாகிய மகாமண்டலேசுவரரைப் பற்றி நினைக்கும்போது நான் கேள்விப்பட்டிருக்கும் விநோதமான பறவையைப் பற்றித்தான் எண்ணத் தோன்றுகிறது. மேலைக் கடலின் தீவுகளில் நெடுந்துாரத்துக்கு அப்பாலுள்ள தேசங்களில் நெருப்புக் கோழி என்ற பெயரில் விந்தையானதொரு தீப்பறவை இருக்கிறதாம். அது கங்குகங்காக நெருப்புத் துண்டுகளை விழுங்கினாலொழிய அதற்கு வயிறு நிறையாதாம். அந்தத் தீப்பறவையைப் போல் வெம்மையும் கொடுமையும் நிறைந்த எதிர்ப்புகளையெல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டுப் பசியாறி வளர்ந்து கொண்டிருக்கிறார். மகாமண்டலேசுவரர். உங்கள் தந்தை நம்மை இலங்கைக்கு அனுப்புகிற விவரம் தெரிந்திருந்தால், தளபதி அதைத் தடுக்கவும் ஏதாவது சூழ்ச்சி செய்திருப்பான். அரண்மனையில் நடக்கிற எந்த அந்தரங்கமான செய்தியும் தன் காதுக்கு எட்டச் செய்து கொள்கிற அளவுக்கு வசதியுள்ளவன் தளபதி” -

“அது எந்த வசதியோ?” என்று குழல்வாய்மொழி இடைமறித்துக் கேட்டாள். -

“உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் அம்மணி! தளபதி வல்லாளதேவனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள்; எமகாதகப் பெண் பிள்ளை அவள். மகாராணிக்குத் துணையாக அரண்மனையில் தங்கியிருக்கிறேன்’ என்று பேர் செய்துகொண்டு, அரண்மனையில் நடக்கும் ஒவ்வொரு காரியத்தையும் உளவறிந்து கொண்டிருக்கிறாள் அந்தப் பெண்” “பகவதிதானே? அந்தப் பெண்ணை நான் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். அவள் இப்போது அவ்வளவு சாமர்த்தியக் காரியாகிவிட்டாளா?” என்று குழல்வாய்மொழி நாராயணன் சேந்தனைக் கேட்டபோது கூத்தன் அச் என்று இரைந்து ஒரு தும்மல் தும்மினான். சேந்தனும் குழல்வாய்மொழியும் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டு கூத்தனை ஒருகணம் கூர்ந்து நோக்கினார்கள். கூத்தன் உடனே வேறு எங்கோ கவனிப்பது போல் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டான். சேந்தன் குழல்வாய்மொழியின் காதருகே நெருங்கி, “அம்மணி! ஊர் பேர் தெரியாத இந்தப் பயலைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு நாம்