பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/605

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

603


முரட்டுத்தனம்?"-பயத்துக்கும் நடுக்கத்துக்கும் ஊடே இப்படி ஒரு பெண்ணிடம் நடுங்கி நிற்கிறோமே என்ற ஆச்சரியமும் அவளை ஆட்கொண்டது.

அந்தப் பெண் ஒரு கையால் குழல்வாய்மொழியின் வாயைத் திறக்க முடியாதபடி அழுத்திப் பொத்திக்கொண்டே, இன்னொரு கையால் கூர்மையான வாளை அவள் முகத்துக்கு நேரே காட்டி, “இடையாற்றுமங்கலத்து அழகியே! உன் பயம் அநாவசியமானது. கொஞ்சம் என் முகத்தையும், குரலையும் கவனித்துப் பார். நான் யாரென்பது தெரியும். உன் உயிருக்கோ, உடலுக்கோ என்னால் ஒரு துன்பமும் ஏற்படாது. ஆனால் நீ மட்டும் கூச்சல் போட்டு என்னைக் காட்டிக் கொடுக்க முயன்றாயோ, நான் எப்படி நடந்து கொள்வேன் என்று உறுதியாகச் சொல்ல முடியாது” என்று கூறினாள். குழல்வாய் மொழி நன்றாகத் தலையைத் திருப்பி மருண்ட விழிகளால் அந்த முரட்டுப் பெண்ணின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவளுக்கு அந்த உண்மை புரிவதற்குச் சில விநாடிகள் தேவைப்பட்டன. ஆகா! இந்தக் கீச்சுக்குரலும் அழகு முகமும் கூத்தனுடையவை. அல்லவ்ா? கூத்தன் ஆணா பெண்ணா? இப்போது நான் காண்பதுதான் அவனுடைய உண்மைக்கோலமா? அல்லது காலைவரையில் கண்ட ஆண் கோலம்தான் உண்மையா? என்று எண்ணி மனம் குழம்பினாள் குழல்வாய்மொழி, அவளுடைய நினைவுகள் தடுமாறின.

“இன்னும் நன்றாக உற்றுப் பார்த்தால் என்னை நீ தெளிவாய்த் தெரிந்துகொள்ளலாம், அம்மா! எந்த வல்லாள தேவனின் தங்கையைப் பற்றி நேற்று நீங்கள் சேந்தனிடம் மிக அலட்சியுமாக விசாரித்தீர்களோ, அந்தப் பெண் பகவதிதான் இப்போது உங்களைப் பயமுறுத்திக்கொண்டு நிற்கிறாள்” என்று சிரித்துக்கொண்டே அந்தப் பெண் தன்னைப் பற்றிக் கூறியபோது குழல்வாய்மொழியின் கண்கள் ஆச்சரியத்தால் அகன்றன. பகவதி மேலும் பேசினாள்: “இன்னும் கேள்! நீயும் சேந்தனும், சந்திப்பதற்கு முன்பே நான் குமாரபாண்டியரைச் சந்தித்துவிடுவேன். அப்படிச் சந்தித்தால் உங்கள் வரவைப் பற்றிச் சொல்கிறேன். என்னை இதே கப்பலில் பிரயாணம் செய்ய