பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/616

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

614

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


முடியும்? கல்பகோடிக் காலம் வாழவேண்டாம். ஒரு திங்கட் காலம் வாழ்ந்தாலும் ஏதாவதொரு உணர்ச்சியில் முழுமையாகத் தோய்ந்து வாழவேண்டும், ஊழியூழியாக வாழ்வதைவிட இந்தச் சிறிது காலத்து முழுமை உயர்ந்தது, பெரியது இணையற்றது.

முழுமையைப் பற்றி நினைத்தபோது அவனுக்கு மதிவதனியின் நினைவு வந்தது. இடுப்பில் இடைக் கச்சத்துடன் சேர்த்துப் பிணைத்துக்கொண்டிருந்த சிறிய பட்டுப் பையைத் திறந்தான். இருளிலும் தன் நிறத்தையும், ஒளியையும் தனியே காட்டும் அந்தப் பொன்னிற வலம்புரிச் சங்கை எடுத்தான். பித்தன் செய்வதுபோல் கண்களில் ஒற்றிக்கொண்டான். கைவிரல்களால் வருடியவாறு மடியில் வைத்துக் கொண்டான். கப்பலில் தான் பாடிய கவிதை நினைவு வந்தது அவனுக்கு. உணர்ச்சித் துடிப்பைச் சொற்களின் நளினமாக்கிய விந்தையை நினைத்தபோது மட்டும் மனத்தில் முழுமை தோன்றுவது போலிருந்தது அவனுக்கு அரசாட்சியையும் வெற்றி தோல்விகளையும் எண்ணிப் பார்த்தபோது அவன் உணர்ச்சிகளில் முழுமை தோன்றவில்லை.

‘அருமை அன்னையும் மகாமண்டலேசுவரரும் தன்னிட மிருந்து எதிர்பார்த்த கடமைகளை நினைத்தபோது அவற்றில் முழுமை தோன்றவில்லை. ஏனென்றால் அந்தக் கடமைகளை அவன் இன்னும் நிறைவேற்றவேயில்லை. இடையாற்று மங்கலத்தின் அழகிய சூழ்நிலையில் குழல்வாய்மொழி என்ற பெண்ணோடு பழகிய பழக்கத்தை நினைக்கும்போதும் முழுமை ஏற்படவில்லை. மதிவதனி என்ற பெண்ணைச் சந்திக்க நேராமலிருந்தால் ஒருவேளை இடையாற்றுமங்கலத்து அழகியாவது, கனகமாலை என்ற பேரெழில் நங்கையாவது அவனைக் கவர்ந்திருக்கலாமோ, என்னவோ? வெள்ளத்தில் பழைய தண்ணிர் அடித்துக்கொண்டு போகப்படுகிற மாதிரி அவன் மனத்தின் அரைகுறை நினைவுகளையெல்லாம் மதிவதனி என்ற முழுமை இழுத்துக்கொண்டு விட்டதா? அல்லது அந்த முழுமையில் அவன், மூழ்கி விட்டானா? பார்க்கப்போனால் முழுமையான வாழ்வு என்பது தான் என்ன? என்னைப்போல் அரச குடும்பத்தில் பிறந்தவனுக்குப் போர்களும், அவற்றில் வெற்றி வாகை சூடுவதும் தான்