பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/647

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

645


“அப்படிப் பார்க்காதே, நீ உன் கோபம் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. இன்று கன்னியாகுமரியிலிருந்து நீ இடையாற்றுமங்கலத்துக்கு என்னைத் தேடிக்கொண்டு வந்த இரவிலிருந்து இந்த விநாடி வரை ஒவ்வொன்றாக எத்தனைத் தவறுகள் புரிந்திருக்கிறாய் என்று எண்ணிக்கொண்டே வந்திருக்கிறேன் நான். ஒழுக்கத்தையும், பண்பையும் போற்றி ஆளத்தெரியாத நீ படைகளை ஆளத் தகுதியற்றவன்.”

“நிறுத்துங்கள், மகாமண்டலேசுவரர் என்ற பதவிக்கும் அறிவுக்கும் என் நெஞ்சம் செலுத்திவந்த மரியாதையை நான் விடவேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. இந்தக்கணம் முதல் அந்த மகாமேதையை நான் ஒரு சாதாரண எதிரியாகப் பாவிக்க வேண்டியதுதான். நான் சாதாரண எதிரியாகப் பாவிக்கத்தக்க மனித உணர்ச்சிக்கு அவரும் ஆளாகிவிட்டார்” என்று தளபதி அவர் முகத்தைத் துணிவுடன் நிமிர்ந்து பார்த்துக்கொண்டே கூறினான். அவன் வார்த்தைகள் அவருடைய கோபத்தை மேலும் துண்டிவிட்டன.

“முட்டாள்களின் மரியாதையை அறிவாளிகள் எப்போதுமே எதிர்பார்ப்பதில்லை, தளபதி ! என்னை எதிரியாக ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நீ பெரியவன் என்பதைக் கூட நான் ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை. ஓர் இரகசியத்தை நீ இந்தச் சமயத்தில் என்னிடமிருந்து தெரிந்துகொள். அறிவின் துனி மிகவும் கூர்மையானது. நன்றாகத் தீட்டப் பட்ட கத்தியை போல் சந்தர்ப்பமும் வீசும் இலக்கும் கிடைத்தால் அதற்கு எதையும் குத்தி அழிக்க வலிமை உண்டு. சந்தர்ப்பமும் இலக்கும் தவறிவிட்டால் கை தவறி விழுந்து தானே கூரழியும் கத்தியைப்போல் தன்னையே அழித்துக் கொள்ள வேண்டியதுதான்.” -

தளபதியின் முகத்தில் கோபவெறி கூத்தாடியது. கைகள் எதற்காகவோ துடித்தன. முகம் முழுவதும் கருணைக் கலப்பற்ற கொடுமை மறம் வந்து குடிகொண்டிருந்தது. அவன் வெறியனாக மாறினான். -

“மகாமண்டலேசுவரரே! எனக்கு அறிவின் வலிமையைப் பற்றிய இரகசியம் தெரியவேண்டியதே இல்லை. ஆனால்