பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/648

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

646

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


வீரத்தின் இரகசியம் இதுதான் என்பதை இப்போதே உங்களுக்குத் தெரிவிக்கிறேன். தான் அழிவதாயிருப்பினும் அப்படி அழியுமுன் தன் எதிரியை முதலில் அழித்துத் தீர்ப்பதுதான் வீரத்தின் வலிமை” என்று கூறிக்கொண்டே குபிரென்று வாளை உருவிக்கொண்டு அவர்மேல் பாய்ந்தான்.

அவன் நினைத்ததுபோல் அவர் பயந்து ஓடவோ, திடுக்கிட்டுச் கூச்சலிடவோ இல்லை. அவன் அப்படிச் செய்வான் என்பதை முன்பே எதிர்பார்த்தவர்போல் அசையாமல் நின்றார். அளப்பரிய ஆற்றல் நிறைந்த தம் கண்களை இமைக்காமல் குத்துவதற்கு வாளை ஓங்கிக்கொண்டு வரும் அவனையே பார்த்தார். சலனமும் அசைவுமற்ற சிலையாகிவிட்டாரா அவர்? பின்னால் கட்டிக் கொண்ட கைகளை எடுக்காமல் மார்பை நிமிர்த்திக்கொண்டு நின்ற அந்தத் தோற்றத்தை நெருங்கி நெஞ்சுக்குக் குறிவைத்து வாளை ஓங்கியபோது தளபதியின் கை வெடவெடவென்று நடுங்கியது. மனமும் நடுங்கியது. கால்களும் நடுங்கின. நேர்கொண்டு பார்க்கும் அந்தக் கண்கள் இரண்டும் கணத்துக்குக் கணம் பெரியதாய்ப் பிரம்மாண்டமாய் அகன்று விரிந்து தன்மேற் கவிந்து தன்னை அமுக்குவதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது அவனுக்கு.

அந்தப் பிரமை ஏற்பட்ட அடுத்த விநாடி அவன் முகம் வெளிறியது. கண்கள் மருண்டன. உடல் நடுங்கி ஒய்ந்தது. கையிலிருந்த வாள் நழுவிக் கீழே விழுந்தது. ஏதோ ஒரு பயம்-காரணமற்ற பயம் அவனைத் தடுத்தது. ஒவ்வோர் அடியாக நகர்ந்து பின்வாங்கினான் அவன். என்ன செய்கிறோம் என்ற உணர்வேயின்றிப் பின்னால் நகர்ந்து கொண்டே இருந்தான் தளபதி. மகாமண்டலேசுவரர் என்ற அகண்டமான தோற்றம் அப்படியே நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது. . . .

‘தளபதி ! ஏன் தயங்குகிறாய்? எதற்காக்ப் பின் வாங்குகிறாய்? என்னை அழித்து விடுவதற்கு இதைப்போல தனிமையான சந்தர்ப்பம் இனி வேறு எப்போது உனக்கு வசதியாகக் கிடைக்கப்போகிறது? இப்போது கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்” என்று மகாமண்டலே