பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/664

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

662

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


மேலும் சிறிதாக்கிக் கொண்டு தன் துடிப்பை அடக்க முடியாமல் கேட்டான் குழைக்காதன்.

“எல்லா விவரமும் சொல்கிறேன். பொறுமையாக இருங்கள்” என்று மெல்லக் கூறிவிட்டுக் குழைக்காதனின் கையைப்பற்றி ஒரு மூலைக்கு இழுத்துக் கொண்டு சென்றான் தளபதி.

“மகாசேனாபதி! இப்போது நாம் இங்கே தனியாக நின்று பேசிக் கொண்டிருக்க அவகாசமில்லை. எதிர்பார்த்துக் கொண்டிருந்த கப்பல் துறையில் வந்து நின்றுவிட்டது. மகாமண்டலேசுவரர், மகாராணி முதலியவர்கள் இளவரசரை வரவேற்பதற்காக அதோ முன்னால் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்” என்று பரபரப்போடு சொன்னான் மகரநெடுங்குழைக்காதன். . -

“பரவாயில்லை, குழைக்காதரே! அவர்களெல்லாம் கப்பலிலிருந்து இறங்கி வருவதற்குள் நாமும் போய்ச் சேர்ந்து கொள்ளலாம். குமாரபாண்டியனோடு பகவதி உடன் வருவாளாகையினால் எல்லாம் அவள் கவனித்துக் கொள்வாள்:” “பகவதி கப்பலில் வருகிற விவரத்தைச் சொல்லி அவளையும் சேர்த்து அழைத்து வந்துவிட வேண்டுமென்று தாங்களே மகாமண்டலேசுவரரிடம் வேண்டிக் கொண்டீர்களாமே?” -

“அவர் உங்களிடம் சொன்னாரா அப்படி?” “சொல்லியது மட்டுமில்லை, உங்கள் உடல் நலனைக் கவனிப்பதற்காக நான் உடனே படைக்கோட்டத்துக்குப் போயாக வேண்டுமென்று என்னிடம் ஓர் ஒலை கொடுத்து இங்கிருந்து துரத்தினார். நானும் முதலில் அதை நம்பிப் புறப்பட்டு விட்டேன்.” என்று தொடங்கி, நடந்த விவர்த்தைத் தளபதிக்கு சொன்னான். . . . .

‘நீங்கள் செய்தது நல்லதாய்ப் போயிற்று. மகாமண்டலேசுவரர் கொடுத்த ஒலையை நம்பிப் படைக் கோட்டத்துக்கு வந்திருந்தால் என்னைப் போலவே நீங்களும் தப்ப முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பீர்கள், இடைவழியிலேயே அவருடைய ஒலையைக் கிழித்துப்போட்டுவிட்டு விழிஞத்துக்கே