பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/718

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

716

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்

கொடுத்து வைத்ததுதானே கிடைக்கும்? நீ போ. உன் விருப்பம்போல வாழு!” என்று சொல்லிவிட்டு மேலாடையால் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பி நடந்தார் அவர். நடை தள்ளாடித் துவண்டது.

“நில்லுங்கள்:” நடந்து சென்றவர் நின்று திரும்பிப் பார்த்தார். குழல்வாய்மொழிதான் கூப்பிட்டிருந்தாள். அருகில்வந்து நின்று தந்தையின் முகத்தையே பார்த்தாள் அவள். விநாடிகள் உணர்ச்சிகளில் கரைந்துகொண்டிருந்தன. அவர் முகத்தையும் கண்களையும் பார்க்கப் பார்க்க அவள் மனத்தில் கல்லாக இருந்த ஏதோ ஓர் உணர்வின் இறுக்கம் இளகி நெகிழ்ந்தது. அடுத்தகணம் அழுக்குத் துடைக்கப்பட்ட கண்ணாடிபோல் அவள் முகபாவம் புனிதமானதொரு மாறுதல் அடைந்தது. கண்களில் உறுதியான ஒளிவந்து குடிகொண்டது.

“அப்பா! நான் சேந்தனை மணந்துகொள்கிறேன்” என்று திடமான குரலில் சொன்னாள் குழல்வாய்மொழி. அவர் ஆச்சரியத்தோடு முகமலர்ந்து அவளைப் பார்த்தார். அவளைச் சிறுகுழந்தைபோல் கருதி அருகில் அழைத்துத் தழுவி உச்சிமோந்தார். “சேந்தா! இங்கே வா!” என்று உற்சாகத்தோடு அழைத்தார் அவர், சேந்தன் ஓடிவந்து வணங்கினான்.

“இத்தா! உன் மனைவியை அழைத்துக்கொண்டு போ! இருவரும் பறளியாற்றில் நீராடிவாருங்கள். பல நாட்கள் பழகிய காதலனை அணுகுவதுபோல் குழல்வாய்மொழி அவனை அணுகிவந்தாள். சேந்தன் கூசிப் பயந்து ஒதுங்க முயன்றான். அவள் விடவில்லை.

“ஒதுங்கினால் மட்டும் உறவு போகாது வாருங்கள்:குழல் வாய்மொழி துணிவாக அவன் கையைப்பற்றி அழைத்துக்கொண்டு போனாள். அந்தக் கை தன்மேல் பட்டபோது மலர்க்கொத்து ஒன்று தீண்டியது போன்ற உணர்வை அடைந்தான் சேந்தன். அவன் உடல் சிலிர்த்தது. வயிற்றுப் பசியுள்ள பிச்சைக்காரனுக்குப் பட்டுப் பீதாம்பர்ம் கிடைத்ததுபோல் அவன் எண்ணத்தில் தாழ்வு மனப்பான்மையும் கூச்சமும் உண்டாயின. குழல்வாய்மொழி