பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/719

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

717


கலகலப்பாகப் பேசிப் பழக முயன்றும் சேந்தன் கூசிக்கொண்டேயிருந்தான். அவளால் அவ்வளவு சுலபமாகத் தன்னை எப்படி மாற்றிக்கொள்ள முடிந்ததென்று அவனுக்குப் புரியவே இல்லை. .

இருவரும் நீராடிவிட்டுச் சிவன் கோயில் அடைவதற்குள் இடையாற்றுமங்கலம் தீவைச் சுற்றி ஒரு பெருங்குழப்பம் உண்டாயிற்று. கூட்டம் கூட்டமாக ஆயுதம் தாங்கிய முரட்டு மனிதர்கள் ஓடிவந்தார்கள். மரங்களெல்லாம் வெட்டப்படும் ஓசை காதைப் பிளந்தது. ஒரே கலகம், ஒலம்தான், கலகக்கும்பல் தீவை நெருங்கிவிட்டது.

அந்த நேரத்தில் குழல்வாய்மொழியையும், சேந்தனையும் சிவன் கோவிலுக்குள் அழைத்துப்போய் மலர் தூவி ஆசி கூறினார் மகாமண்டலேசுவரர். பின்பு இருவரையும் வெளியே அழைத்துவந்தார். “இங்கிருந்து போய் எங்கேயாவது நன்றாக வாழுங்கள். அது போதும் என்னைப் பற்றிக் கவலை வேண்டாம். கலகக் கூட்டம் வந்துவிட்டது. வேறு வழியாகத் தப்புங்கள்” என்று அவர்களை அவசரப்படுத்தினார் மகாமண்டலேசுவரர். “அப்பா! நீங்களும் எங்களோடு வந்துவிடுங்கள். இங்கே இருக்க வேண்டாம்” என்றாள் குழல்வாய்மொழி.

“இல்லை! நான் வரப்போவதில்லை. நீங்கள் புறப்படுங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் ஓர் ஒலையை எடுத்து வந்து சேந்தனிடம் கொடுத்தார். “சேந்தா, எப்போதாவது முடிந்தால் இந்த ஒலையை மகாராணியிடம் கொடுத்துவிடு” என்று சொன்னவர் இருவரையும் ஒருமுறை நன்றாகப் பார்த்துவிட்டு விருட்டென்று சிவன் கோயிலுள்நுழைந்து கதவை அடைத்து உட்புறமாகத் தாழிட்டுக்கொண்டார். வெறித்தனமான கூச்சல்களோடு ஆட்கள் ஓடிவரும் ஓசை மிக அருகில் கேட்டது. - .

சேந்தன் குழல்வாய்மொழியை இழுத்துக்கொண்டு ஓடினான். புதர்களிலும் மரக் கூட்டங்களின் அடர்த்தியிலும் பதுங்கிப் பதுங்கி ஆற்றைக் கடந்து இரவோடு இரவர்க முன்சிறைக்குப் போகிற வழியில் நடந்தார்கள் அவர்கள்.