பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/723

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

721


பார்த்ததிலேயே எல்லாக் காரணங்களும் அவருக்கு ஒருவாறு விளங்கிவிட்டன. குமாரபாண்டியர் சொல்லத் தயங்கிய வற்றையும் அவர் தெரிந்துகொண்டார். எல்லாம் தெரிந்து கொண்டு திரும்பி வந்த அவர் நேரே குமாரபாண்டியனின் பாசறைக்குச் சென்றார். பாசறையில் தீப ஒளி எரிந்து கொண்டிருந்தது. மகாமண்டலேசுவரருக்கும் தன் தாய்க்கும் எழுதவேண்டிய திருமுக ஒலைகளை எழுதி விட்டுக் காத்திருந்தான் குமாரபாண்டியன். - -

“வாருங்கள் சக்கசேனாபதி! நான் வந்து எழுத வேண்டிய அவசர ஒலைகளை எழுதிவிட்டு இவ்வளவு நேரமாக நீங்கள் வருவீர்களென்று விழித்துக்கொண்டு காத்திருக்கிறேன். அதற்குள் நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்?” என்று தன்னை நோக்கிக் கேட்ட குமாரபாண்டியனின் முகத்தைச் சிரித்தவாறே கூர்ந்து பார்த்தார் சக்கசேனாபதி.

“சக்கசேனாபதி! இந்த நெருக்கடியான நிலைமையில் என் முகத்தைப் பார்த்தால் சிரிப்புக்கூட வருகிறதா உங்களுக்கு ?”

“உங்கள் முகத்தைப் பார்த்துச் சிரிக்கவில்லை இளவரசே! சில முக்கியமான செய்திகளை இவ்வளவு நேர்ந்த பின்பும் என்னிடம் கூடச் சொல்லாமல் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, அதை நினைத்துச் சிரித்தேன்.”

“அப்படி எவற்றை நான் உங்களிடம் மறைத்தேன்?

“சொல்லி விடட்டுமா? “நீங்கள் அவற்றைத் தேடித் தெரிந்துகொண்டிருந்தால் சொல்லித்தானே ஆக வேண்டும்?” என்று சோர்ந்த குரலில் சொன்னான் குமாரபாண்டியன். * .

“மகாமண்டலேசுவரருடைய சூழ்ச்சியில்தான் பகவதி ஈழ நாட்டில் இறந்து போனாளென்று கலகக்காரர்கள் பேசிக்கொள்கிறார்கள். இன்னும் அவருடைய சூழ்ச்சியால் படைகள் போருக்குப் புறப்படுகிற சமயத்தில் தளபதி மட்டும் இரகசியமாகச் சிறை வைக்கப்பட்டானாம். அதேபோல் ஆபத்துதவிகள் தலைவனையும் சூழ்ச்சி செய்து சிறைப்படுத்த முயன்றாராமே அவர்? நீங்கள் கப்பலில் வந்து விழிஞத்தில் இறங்கியதும் மகாமண்டலேசுவரர் உங்களைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், பகவதியின் மரணத்தைப் பற்றி

பன.தே.46 -