பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/751

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

749


முக்காடிட்டுக்கொண்டு கப்பலிலிருந்து இறங்கினான் குமாரபாண்டியன். அந்த உள்ளம் இன்பக் கிளர்ச்சி கொண்டு பொங்கியது. அவலக் கவலைகளற்ற வெற்றி தோல்விகள் இல்லாத ஒரு புதிய போக பூமியை மிதித்துக்கொண்டு நிற்பது போல் அவன் பாதங்கள் உணர்ந்தன. கவலையற்றுப் பொங்கும் உற்சாகத்துடன் வலம்புரிச் சங்கின் ஊதுவாயை இதழ்களில் வைத்து முழக்கினான் அவன். நீராடி எழுந்த கன்னிகைபோல் வைகறையின் மலர்ச்சியில் அந்தத் தீவின் அழகு பன்மடங்கு சோபித்தது. அந்தத் தீவின் கடைவீதித் திருப்பத்தில் நின்று கொண்டு கப்பல் வந்து நிற்பதையும், அதிலிருந்து ஒருவர் இறங்குவதையும் பார்த்தவாறு இருந்தாள் ஒர் இளம்பெண். குமாரபாண்டியனின் சங்கொலி அந்தப் பெண்ணின் செவிகளில் அமுதமாகப் பாய்ந்தது. அந்த ஒலியைக் கேட்ட மறுகணமே அவள் பேதைப் பருவத்துச் சிறுமிபோல் உற்சாகத்தோடு கடற்கரையை நோக்கி ஒடலானாள். அந்தப் பெண்ணின் ஒட்டம் காட்டில் தன் போக்கில் ஒடும் புள்ளிமானை நினைவுபடுத்தியது. அவள் அவனை நெருங்கிவிட்டாள். சங்கநாதம் செய்துகொண்டு மணல் திடலில் நின்ற குமாரபாண்டியன் அவளைக் கண்டதும், “மதிவதனி!” என்று கூவினான். அந்தக் கூவலில்தான் ஊழிஊழியாகத் தேங்கி நின்று சுமந்துபோனது போன்ற அன்புத் துடிப்பின் தொனி எத்தனை உருக்கமாக ஒலிக்கிறது? அவள் வந்து அவனெதிரே நின்று பார்த்தாள். பார்த்துக் கொண்டேயிருந்தாள். முழு மதியைக் கறைதுடைத்தாற் போன்ற முகத்தில் மலர்ந்து அகன்று கயல்விழிகளால் அவனைப் பருகிவிடுவதுபோல் நோக்கிய நோக்கம் பெயரவே இல்லை.கல்பகோடி காலம் பிரிந்து நின்று விரகதாபத்தில் நலிந்து அன்பு தாகத்தால் வாடிய காதலிபோல் அவள் கண்கள் காட்சியளித்தன. х . . . -

மதிவதனி! நான் வந்துவிட்டேன். இனி உன்னைப் பிரிந்து போகமாட்டேன். அன்றொரு நாள் நீ என் உயிரைக் காப்பாற்றினாய்! உன்னைக் காப்பாற்றுவதற்கு இன்று நான் வந்திருக்கிறேன்!” என்று கூறியவாறே அவள் அருகில் நெருங்கி அவளைத் தழுவிக் கொண்டான் குமாரபாண்டியன். அன்புப் பெருக்கில் பேச்செழாமல் வாய்மூடி நின்ற மதிவதனி “என்