பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 காவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு வதந்திகளாலும், புளுகு மூட்டைகளாலும் பல பூதங்கள் உருவாகின்றன. படிப்போரை வயிறு வெடிக்கச் சிரிக்கவைக்கின்றன. இதுமட்டும் சிலர்உரைக்கக் கேட்கு மட்டும் இன்னொருவன் புளுகினான் இயன்ற மட்டும்; “அதுமட்டும் தனியல்ல வான மட்டும் அளவுடைய ஐந்தாறு பெரும்பூதங்கள் குதிமட்டும் நிலத்தினிலே தோன்றா வாகிக் கொண்டமட்டும் ஆட்களையும் வாயிற்கெளவி எதுமட்டும் வருவேன்னன் றெனையே பார்க்கும் என்மட்டும் தப்பினேன்” என்று சொன்னான். "வாலிருந்ததா” என்றே ஒருசேய் கேட்டான் "வாவில்லை பின்புறத்தில் ஏதோ ஒன்று கோலிருந்ததோ என்றும் கொடியோ என்றும் கூறமுடியாநிலையில் இருந்த”தென்றான் “மேலிருந்து வந்திடுமோ?” என்றான், அந்த விதிவரை வந்ததனைப் பார்த்தேன் என்றான். காலிருந்தும் போதாமல் இறக்கை வேண்டிக் கடிதாக ஓடினான் ஐயோ என்றே!” அவனோடக் கண்டொருவன் ஓட ஆங்கே அத்தனையே ரும்பதந்தார்! பூதம் பூதம் இவனோடி வந்ததெனக் கூச்ச லிட்டார் இவ்வீதி அவ்வீதி மக்க ளெல்லாம் கவனோடும் கல்லைப்போல் விரைந்தா ரேனும் எவ்விடத்தில் போவதென்னும் கருத வில்லை கவலைனரு துகள்போல மக்கள் யாரும் கால்கடுக்க நகர்சுற்றிச் சுற்றி வந்தார். அத்தெருவில் அவ்விடத்தில் பூத மென்றும் அதுபூதம் இதுபூதம் எனப்பு கன்றும் தொத்துகின்ற வெளவால்போல் மரத்தின் மீதும் துங்குகின்ற பூனைபோல் பரண்கள் மீதும்