பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தில் படிமங்கள் 127 uşatolitésir (Kinaesthetic images), ugruflapa,ü uygunãessir (Conventional images) orgârusmall the sireror.” googsflurrësità ஒன்று இரண்டு பலவுமாக இணைந்து படிமக்கொத்துகளாகவும் (Cluster images) கவிதையில் அமைகின்றன. மேலும் குறியீடுகளாக அமையும் சொற்கள் "கட்டுண்ட படிமங்களையும் (Tied images), விடுதலைப் (சுதந்திரப் படிமங்களையும் (Free images) உண்டாக்கிப் படிப்போரிடையே ஒத்துணர்வுத் துலங்கலையும் (Sympathetic response), @či- 2 6QTQyıñ ĝ6ufälösmayuyú (Empathetic response) எழுப்புகின்றன. இவற்றால் படிப்போரிடையே பாட்டதுபவம் - முருகுணர்வு - கொடுமுடியை எட்டுகின்றது. இந்தக் கருத்துகளை அடிப்படையாகக்கொண்டு "பாண்டியன் பரிசை ஆராய்வோம். பாவேந்தரின் நோக்கு அவர்தம் காவியத்தில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும் காண்போம். கட்புலப் படிமங்கள்: பல்வேறு படிமங்களிடையேயும் கட்புலத்தைக் கவரும் படிமங்களே அதிகமாக உள்ளன. இவையே படிப்போரின் மனத்தில் நிலையான பதிவினை விளைவிக்கின்றன. கட்புல நரம்பு ஏனைய புல நரம்புகளைவிடத் தடித்திருப்பதே இதற்குக் காரணம் எனக் கருதலாம். இதன் காரணமாகவே இக்காலக் கல்வியில் கட்புல-செவிப்புலத் துணைக் கருவிகள் அதிகமாகப் பயன்படுத்தப் பெறுகின்றன. பள்ளிகளில் சுற்றுலா அமைத்து மாணாக்கர்களைப் பல்வேறு இடங்கட்கு இட்டுச் சென்று பல்வேறு காட்சிகளை நேரில் காணச் செய்கின்றனர். பாவேந்தர், பாண்டியன் பரிசில், கட்புலன் அடிப்படையில் அமைந்த சில படிமங்களைக் காண்போம். பூதமாக வரும் "எட்டி'யைப் பற்றிக் கவிஞர் கூறுவது. எரிவிழியும் கருமுகமும் நீண்ட பல்லும் குட்டைமயிர் விரிதலையும் கொடுவாள் கையும் கூக்குரலும் நீர்ப்பாம்பு நெளியும் மார்பும் கட்டியதோர் காருடையும் ஆக மாற்றிக் காணுவார் நிலைப்படியே பூதம் ஆக்கி விட்டார்கள் மலையின்மேல்” 2, ibid - P.11 3. இயல்-48:1-பக், 84 氯钴