பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

பாண்டிய மன்னர்

ஆசீர்வதித்து, அரசனை வாழ்த்திப் பின் வருமாறு பேசினர்:

"அரசர் பெருமானே, இன்று உமது கலாசாலை மாணாக்கர்க்கெல்லாம், சிறந்ததொரு திருநாளாகும். தமது உபதேச மொழிகள் அவர்களுக்கு எழு பிறப்புக்கும் ஏமாப்பு அளிக்க வல்லவையாம். அம்மொழிகள் எமது சிறாரால் நன்கு நினைவிலிருத்திப்பயன் பெறவுதவுமாறு செய்யுளாய் அமைந்திருத்தல் சிறப்பாம். நல்லிசைப் புலமை வாய்ந்த தம் வாய் மொழியால் அக்கருத்துக்கள் செய்யுளாய் அமைந்திருத்தல் வேண்டும் என்பதே எமது கருத்தாம். கலை மகள் திருவருளும் திருமகள் பெருங்கருணைச் செல்வமும் படைத்த தம் போன்ற புரவலர் வாய்ப் பிறப்பாகிய அமுத மொழிகள் எமது மாணாக்கர்க்கு என்றும் நற்பயன் உதவுவனவாம்.

இவ்வாறு அத்தமிழ்ப் பெருங்கணக்காயர் பேசியதைக் கேட்ட நெடுஞ்செழியன், பின் வருஞ் செய்யுளைக் கூறினன்:

“உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலாற் றாயும்மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே."[1]

—————————————————————

  1. புறநானூறு - செய்யுள், 183.